Nimalkumar Blog

Tuesday, February 14, 2012

இதுதான் காதல் என்பதா..??!

[Disclaimer: இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்கவும்]

சின்னவனா இருந்தப்பவே ஊர் சுத்த பிடிக்கும்
College cut அடிச்சுட்டு லோ லோனு சுத்திருக்கேன்
அதனாலேயோ என்னவோ..
ஊர் சுத்தரதையே வேலையா வாங்கிருக்கேன்   
பெரிய Bank-ல  Marketing Rep வேலை -
Weight-aana pocket-aa பாத்து வேட்டு வைக்கறதுக்கு
சம்பளம் + incentives வேற..  

மதியம் உச்சி வெயில்.. 
பைக் ஓட்டிட்டு வந்து tired-ல, சாப்டலாம்னு 
அந்த முக்கு கடையில ஒதுங்கியிருந்தேன்.

First time-
உன்ன அந்த முக்கு கடையில வச்சுதான் பாத்தேன்..
கடைசியாதான் வந்த நீ..
almost அந்த time-ல சாப்ட்டு முடிச்சிருந்தேன்..

அன்னைக்கு பாத்தவுடனே, 
மனசுக்குள்ள மின்னல் அடிச்சது-னுலாம் பொய் சொல்ல மாட்டேன்.
but தோணிச்சு.. பாத்தவுடனே தோணிச்சு.. 
கொஞ்சம் wait பண்ணி போகலாம்னு தோணிச்சு..
ஹோட்டல்காரன் நெனச்சிருப்பான் -
"கொட்டிகிட்டாச்சுனா கிளம்ப வேண்டியதுதானே.."
"................... ஒரு  நல்ல  item வந்துட  கூடாது.." 
".................... உக்காந்த  எடத்த  விட்டு எந்திரிக்க மாட்டானுங்க"


கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தேன்.. 
ஏதோ ஒரு difference உன்கிட்ட.. 
என்னனு புரியல.. ஆனா அது பிடிச்சிருந்தது..
அப்டியே பாத்துட்டே இருக்கலாம்னு தோணிச்சி
but எவ்ளோ நேரம்தான் சும்மா கடையில உக்காந்துட்டு  இருக்கறது
சாப்ட ஆரம்பிச்சேன்.. 
already heavyaa இருந்தும், கண்டுக்காம சாப்ட ஆரம்பிச்சேன்
அன்னைக்கு பிடிச்சிருந்தது.. 
எல்லாமே.. உன்ன அன்னைக்கு பாத்தது.. பாத்துட்டே சாப்டது.. 

இன்னும் கொஞ்ச நேரம் சாப்ட்டிருக்கலாம் 
but already bill கொண்டு வந்து வச்சு பத்து நிமிஷம் ஆச்சு 
இதுக்கு மேலயும் try பண்ணினா owner கழுத்த சேத்து.. 
வேணாம் விட்ரலாம்.. போதும்.
மனசே இல்ல கிளம்பறதுக்கு ..
மறுபடியும் உன்ன எப்டியாவது try பண்றதுன்னு, 
முடிவு  பண்ணிட்டு கிளம்பினேன் ..

அன்னையிலருந்து தினமும் வருவேன்.. 
evening  office முடிஞ்சதும் நேரா, 
அந்த கடை முன்னாடிதான் நிப்பேன்..
but ஒரு நாள் கூட அதுக்கப்றம் உன்ன அங்க பாக்க முடியல..

ஒரு நாள்.. விரக்தியின் உச்சத்துல, 
யார்டயாவது விசாரிச்சுடலாம்னு decide பண்ணேன்.
ஹோட்டல்ல இருக்கற பையன 
மளிகை கடையில வச்சு பிடிச்சேன்..
உன்ன பத்தி அடையாளம் சொல்லி கேட்டேன்.. 
அவனுக்கு சரியா புரியல..
ரொம்ப நேரம் explain  பண்ணேன்.. 
but அவன் ஒரு வார்த்தை கூட பேசல

அவன சொல்லி குத்தமில்ல.. 
அவன் கடையில daily கலர் கலரா items வந்து போகும்.. 
அவனுக்கு எல்லாமே ஒரே மாதிரிதானே.. 
specific-aa கேட்டா அவனுக்கு எப்டி தெரியும்?

இருந்தாலும், 
தெரியாதுனாவது சொல்லிருக்கலாம்
ஒரு வேளை.....  
அவன் ஊமையா??

Life-la எதையோ miss பண்ணிட்டமோ-னு நெனச்சி குழப்பமா உக்காந்தப்போ..
அந்த மளிகை கடையில பொட்டலம் போடுற பையன் சொன்னான் -
"அண்ணே, அந்த பையனுக்கு தமிழ் தெரியாது.."
".............. Hindi-la பேசுங்க புரியும்"
அடடே.. இது தெரியாம அவன பிடிச்சு உக்கார வச்சு,
ரெண்டு மணி நேரம் கதற கதற மொக்க போட்டுட்டேமே..

நமக்கும் Hindi-kumdhaan  ரொம்ப தூரமாச்சே..
So, என்னோட next mission - எப்டியாவது Hindi படிக்கறது..!

வீட்டுக்கு போயி -
முடிஞ்ச அளவுக்கு hindi movies போட்டு போட்டு பாத்தேன்.. ஒண்ணும் புரியல..
doordarshan-la எல்லா serials-m உக்காந்து பாத்தேன்.. கொஞ்சம் கூட புரியல..
அப்போதான் தோணிச்சு - Smart work is better than hardwork!
இவ்ளோ கஷ்ட படுறதுக்கு பதிலா..
அந்த பையனுக்கு தமிழ் கத்து குடுத்துடலாம்னு தோணிச்சி..
ச்சே.. அது இன்னும் கஷ்டம் - இல்லைனா.. 
Hindi தெரிஞ்ச யாரையாவது வச்சு adjust பண்ணலாம்னு தோணிச்சி! 

மறுபடியும் மளிகை கடை போனேன்.. 
அண்ணாச்சிய பிடிச்சி Hindi தெரியுமான்னு கேட்டேன்.. 
"radio-la cricket score கேட்டு சொல்ற அளவுக்கு தெரியும்"-னு சொன்னாரு
எனக்குள்ள ஒரு வெளிச்சம்..!! 
இது போதும்னு தோணிச்சு.. 
cricket score correct-aa கேட்டு சொல்ற அண்ணாச்சி,
உன்னையும் correct-a கேட்டு சொல்லிடுவாருனு நம்பிக்கை வந்துச்சி..!

அடுத்து எப்போ ஹோட்டல்பையன் சரக்கு வாங்க வருவான்-னு விசாரிச்சேன்..
செவ்வாய்கிழமை லீவ் போட்டுட்டு, அந்த hindiwala-va market-la மடக்கி பிடிச்சேன்
அண்ணாச்சி, Bhaiyya, அப்புறம் பாவமா நான்..
எலோரும் ரெடி - 
எங்களோட multi-language group discussion-a ஆரம்பிச்சோம்..

அண்ணாச்சிட்ட அடையாளம் சொன்னேன்..
ஒவ்வொரு வார்த்தையா translate பண்ணி 
கஷ்டப்பட்டு பேசிட்டிருந்தார் ..
first ரொம்ப smooth-aadhaan போயிட்டிருந்தது..
but, போக போக நிலைமை serious ஆகிடுச்சி..!
அந்த பையன் 1hour ரொம்ப பொறுமையா
அண்ணாச்சியோட Hindi-ய கேட்டுடிருந்தான்..
ஆனா அவர் கேட்க வந்தது புரிஞ்சவுடனே கொடூரமாயிட்டான்..
ஒரு 20mins.. பேசினான்.. விடாம பேசினான்..
ரொம்ப force-aa பேசினான்
பேசி முடிச்சுட்டு.. கெளம்பி வேகமா போயிட்டான்.

நான் exam result-ku wait பண்ற student மாதிரி,
அண்ணாச்சியோட மூஞ்சிய பாத்துடிருந்தேன்..
அண்ணாச்சி கொஞ்சம் கோபமா இருந்தாரு..
"என்ன அண்ணாச்சி? hindi-la அசிங்கமா திட்டிட்டானா?" - கேட்டேன் 
அவர் திரும்ப என்னைய திட்டி  இருந்தா கூடமன்னிச்சிருப்பேன்.. 
but அண்ணாச்சி கடுப்புல சொன்ன பதில் - 
"என்ன சொன்னான்னு புரியலையேப்பா"

எனக்கு செம்ம  கோபம் - நியாயமா நான்தானே கோபப்படணும்?
இவ்ளோ நேரம் தலையாட்டி கேட்டுட்டே இருந்துட்டு 
கடைசில ஒண்ணுமே புரியலைன்றாரு..
கோபத்த control பண்ணிக்கிட்டு கேட்டேன் -
"என்ன அண்ணாச்சி, ஒரு வார்த்தை கூடவா புரியல?"
மறுபடியும் அண்ணாச்சி கடுப்புல -
"ஏதோ 'dho baje', 'dho baje'-னு சொல்லிடிருந்தான்.. பாவிப்பய..
கடைசில சரக்கு வாங்காம போயிட்டான்"

அண்ணாச்சியோட கடுப்புக்கு பின்னாடி இருந்த reason புரிஞ்சது
அதே நேரம், எனக்கு நான் பாத்த doordarshan serial help பண்ணிச்சு..
'dho baje'-means ரெண்டு மணி..!!

உனக்கும் ரெண்டு மணிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு வேளை நீ 2 மணிக்கு இருப்ப-னு சொல்றானா???

இருக்கலாம்.. ஏன் இருக்க கூடாது??
எல்லா வழியிலயும் try பண்ணிடலாம்-னு 
நாளைக்கு correct-aa 2  மணிக்கு 
hotel போயிடலாம்னு முடிவு பண்ணேன்..

தேடல்-னு ஒண்ணு இருந்தாதானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்!!
நாளைக்கு புது நம்பிக்கையோட உன்ன தேடி வர போறேன்..
இன்னைக்கு எப்டியும் தூக்கமே  இருக்காது எனக்கு -
இந்த இரவு, கனவுகள் நிறைந்த கனத்த இரவு!

நான் ஏன் இப்டி உன்ன தேடுறேன்?
அப்டி என்ன உங்கிட்ட எனக்கு பிடிச்சது?
எனக்கே தெரியல..
நெறைய பேர பாத்திருக்கேன்.. try கூட பண்ணிருக்கேன்..

சில பேர் sweet-aa பேசுவாங்க.. பிடிக்கும்..
சில பேர் kaaram-aa முறைப்பாங்க.. அதுவும் பிடிக்கும்
but அவங்க மாதிரியே இல்ல நீ..
அந்த ஒரு difference-தான் என்ன இப்டி சுத்த விட்டுடிச்சு!

இத்தன வருஷமா life-la waste பண்ணிட்டேனோ??
உன்ன பத்து வருஷம் முன்னாடி பாத்திருந்தாலும் 
இப்டிதான் சுத்திட்டு இருந்திருப்பேனா?
ஏன் இந்த மாதிரி கேள்விகள் மனசுக்குள்ள கெளம்புது? 
இப்டியே யோசிச்சிட்டு இருக்கும்போது..
பின்னாடி FM-ல background song..... -
இதுதான் காதல் என்பதா??

ம்ம்.. இப்போதைக்கு 
அத காதல்னு சொல்ல மாட்டேன்.. 
அதற்கான தேடல்னு சொல்லலாம்!
அட.. திடீர்னு கவிஞன் மாதிரி பேசறேனா?
காதல், தேடல் - ரெண்டுமே ஒரு மனசை
easy-aa கவிதை எழுத வச்சுடுமே..!

நாளைக்கு உன்ன கண்டிப்பா பாக்க முடியுமான்னு தெரியல..
இருந்தும் என்னோட மனசு இப்பவே கெடந்து அடிச்சுக்குது
அந்த powercut ஆன night-la
வேர்வை சொதசொதப்பில
கொசுக்கடிலாம் மறந்து 
கருப்பு வானத்த
வெறிச்சு பாத்து
கவிதை வரைஞ்சேன் -

"""
   jillunu நீ 
   empty-aa நான் 
   பக்கத்துல பல-காரம்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""

எழுதி முடிச்சப்ப முழிச்சுட்டேன்..
இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சதே இல்ல
கெளம்பி tea கடை போயி, தினத்தந்தி-ல 
ராசிபலன் பேப்பர் தேடி திருப்பினேன்

என்னோட ராசி தேடி வாசிச்சேன் -
"காரியம் கை கூடும்"

tea கடை தாத்தா கிட்ட சொன்னேன் -
"தாத்தா.. உன் பேப்பர் மட்டும் correct-aa  சொல்லிச்சுன்னு வை...."
"........ நாளைக்கே உன் கணக்கு settle பண்றேன்"
  
2 மணி எப்போ ஆகும்னு காத்துட்டிருந்தேன்
கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் நடுக்கம், நெறைய பதட்டம்

சரியா 1.55 - ஹோட்டல் போயாச்சு..
Bike கண்ணாடியில personality check பண்ணிட்டு
ஜன்னல் வழியா எட்டி பாத்தேன்...

என்னால நம்பவே முடியல!
yes - நீதான்.. நீயேதான்..
தினமும் 2  மணிக்கு இங்க இருப்பியா?
இப்டின்னு தெரிஞ்சிருந்தா 
மொத்த office-ayum 
இங்க மாத்திருப்பேனே!

எப்டி ஆரம்பிக்கலாம்?
போதும். wait பண்ணினது போதும்..
இதுக்கு மேல wait பண்ண முடியாது..
நேரா போயி கேட்டுட வேண்டியதுதான்..

நேரா போயி seat புடிச்சு உக்காந்துட்டேன்
கொஞ்ச நேரம் straight-aa உன்னையே பாத்துடிருந்தேன்
WAIT ----  யார் அவன், உன் பக்கத்துல?
நான் உன்ன பாத்தா அவனுக்கென்ன? ஏன் மொறைக்கிறான்?
Hmm.. என்ன நடந்தாலும் பாத்துடலாம்.
பாத்துட்டே இருந்தேன்..

அந்த முரட்டு பேர்வழி ஹோட்டல்காரன கூப்ட்டு
ஏதோ காதுக்குள்ள சொன்னான்..
ஹோட்டல்காரன் என்னை வெறிச்சு பாத்தான்
நான் அதையெல்லாம் கண்டுக்கல..
விடாம உன்னையே பாத்துட்டே இருந்தேன்

ஹோட்டல்காரன் நேரா என்கிட்டே வந்தான்..
பக்கத்துல வந்து, "என்ன வேணும்"-னு கேட்டான்..

எங்க இருந்து எனக்கு இவ்ளோ தைரியம் வந்ததோ தெரியல..
நேரா உன்ன பாத்து கைய காட்டினேன்  -


....
...
...


அங்கே ஒரே அமைதி -

ஹோட்டல்காரன் திரும்பி
சிரிச்சிக்கிட்டே சத்தம் போட்டு சொன்னான்..
'bhaiyaa.. sir-ku தயிர்சாதம்..'

அடடா.. உன்னோட பேர் "தயிர்சாதம்"!!! 
பேர் கேட்ட உடனே எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு..
எனக்கு பேர் ரொம்ப பிடிச்சிருந்தது!!

சத்தம் போட்டு கேட்டேன் -
"அப்டியே.. கொஞ்சம் ஊறுகாய் சேத்து கொண்டு வாங்க"

என்னோட "தயிர்சாதம்" தேடல், ஒரு முடிவுக்கு வந்திச்சு!
எனக்கு கனவுல எழுதின கவிதை ஞாபகம் வந்தது..

"""
   jillunu நீ
   empty-aa நான்
   கொஞ்சம் ஊறுகாய்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""
இதுதான் காதல் என்பதா..??!
Happy Valentines Day!! 

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்

No comments:

Post a Comment

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer