Nimalkumar Blog

Tuesday, September 1, 2015

மீசை கனவுகள்


மீசை -
அந்த ஆசை அவளிடம் எப்படி விதைக்கப்பட்டதோ நினைவில்லை
சிறுவயது கட்டபொம்மன் வேஷமோ, இல்லை-
அவளது அப்பாவின் குத்தும் முத்தமோ..

பள்ளிக்கான அலங்காரத்தில் கடைசிநேர பரபரப்பில்கூட
அம்மாவுடன் தினமும் சண்டை வரும்
போட்டுவிடும் ரெட்டை சடையின் கடைசி நொடியில் 
கற்றை கூந்தல் எடுத்து மீசை வைத்து கண்ணாடி பார்ப்பாள்

அம்மாவின் திட்டுக்கு நடுவே சிணுங்களுடன் கேள்விவேறு -
'மீச வச்சா நல்லாதானே இருக்கு, ஏன் திட்டுற?'

'நீ பொம்பள புள்ள.. மீசலாம் வைக்ககூடாது '- என அம்மா  கூற
'இதெல்லாம் ஒரு காரணமா? ' -என கோபித்து கொள்வாள்

மீசை பெண்ணுக்கு சாத்தியபடாது என்றுணர
அவளுக்கு பன்னிரண்டு வயதுகள் தேவைப்பட்டன

அதன்பிறகு எப்போது மறந்தாளோ - ஞாபகம் இல்லை..
அப்பா மாப்பிள்ளை பார்த்தபோது
அவள் போட்ட முதல் நிபந்தனை - மீசை!
அப்பாவிடம் சிரிப்பு மட்டுமே பதிலாய் கிடைத்தது..

அவளிடம் புகைப்படம் காட்டி சம்மதம் கேட்டபோது
அழுகையே வந்துவிட்டது -
படத்தில் மாப்பிள்ளை முழுக்க மளித்து
சிக்கனமாய் சிரித்திருந்தார்!

ஏதோதோ சமாதானம் சொன்னார்கள்  -
கணினி பொறியாளராம், கை நிறைய சம்பளமாம்..
காராம்.. வீடாம்..
யாருக்கு வேண்டும் இதெல்லாம்?

புகைப்படத்தை வெறித்து பார்த்துகொண்டே
கற்றை கூந்தல் எடுத்து மீசை வைத்து பார்த்தாள்..
'என்ன அம்சமாக இருக்கிறது! இதைப்போய் யாராவது எடுப்பார்களா? '

அதன்பிறகு இப்போதும் அவ்வப்போது
அவளுடைய "அவரிடம்" மீசை பற்றி கேட்டுவைப்பாள் 
சாதகமான பதில் இதுவரை வந்த பாடில்லை..

இன்று மறுபடியும் அந்த நினைவுகள் அவளை பிச்சி தின்ன -
திடீரென சேர்ந்து கொண்டது வாந்தியும் மயக்கமும்..

நொடியில் சுதாரித்து சட்டென பிரகாசமானாள் -
துள்ளி குதித்து கண்ணாடி முன் நின்று ஆடை விலக்கி
கற்றை கூந்தல் எடுத்து வயிற்றில் மீசை வைத்தாள்..

கனவு மெய்ப்பட வேண்டும்!



-----------------------------
வாழ்க மகிழ்வுடன்,
நிமல்







Wednesday, April 4, 2012

பொம்மைகள்..


தொட்டில்கயிறு இழுப்பில்
கண்மூடி தூங்கினோம்

பள்ளி ஈர்குச்சி மிரட்டலில்
புத்தகம் வெறுத்தோம்

நட்பில் பகிர்ந்த பழக்கங்களில்
அர்த்தங்கள் பல அறிந்தோம்

காதலின் கண்ணசைவில்
கவிதையாய் மாறினோம்

குடும்பமெனும் கடிவாளம் மாட்டி
எங்கோ ஓடி ஏதோ தேடினோம்

அனுபவம் என்ற அலைக்கழிப்பில்
மனம் உலர்ந்து உதிர்ந்தோம்

முடி நுரைத்து கண் புரைத்தபோது
வயதும் மனதும் தளர்ந்தோம்

தலைமுறை எட்டி தள்ளியபோது
கடைசியாய் கடவுள் தேடினோம்

பகட்டான பல்லக்கின் சுகத்தில்
ஆடி அசைந்து பயணம் முடித்தோம்.
--

பிறந்து வளர்ந்தோம் -
தளர்ந்து மறைந்தோம் -
இடைப்பட்ட கொஞ்ச காலத்தில் -
அடுத்தவரின் கைகளில் பொம்மைகள் ஆனோம்..!


ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கடைசிவரை,
காற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு முற்றுபுள்ளி-யாகவே ( ? ) ஆடி அடங்குகிறது..


வாழ்க மகிழ்வுடன்,
நிமல்

Saturday, March 3, 2012

மச்சி.. பழகிடும்டா..


பஸ் பிடிக்கும். படிக்கட்டு பிடிக்கும்.. கண்டக்டர் திட்டு பிடிக்கும்...
டீ பிடிக்கும். டீக்கடை பிடிக்கும்.. தினத்தந்தில மடிச்சு குடுத்த வடை பிடிக்கும்..
பாட்டு பிடிக்கும்.. குதிச்சி ஆட பிடிக்கும்.. தொண்டை கிழிய பாட பிடிக்கும்..
பார்க்க பிடிக்கும்.. கலர் பிடிக்கும்.. கலர் கலரா பூக்கள் பிடிக்கும்..
கூட்டம் பிடிக்கும்.. அரட்டை பிடிக்கும்.. கூடி போடுற மொக்கை பிடிக்கும்..
சிரிப்பு பிடிக்கும்.. காமெடி பிடிக்கும்.. விழுந்து விழுந்து சிரிக்க பிடிக்கும்..
பசி பிடிக்கும்.. சாப்பாடு பிடிக்கும்.. வயிறு தள்ள குமுற பிடிக்கும்..
தூக்கம் பிடிக்கும்.. உதைச்சி தள்ளினாலும்.. சுருண்டு புரண்டு தூங்க பிடிக்கும்..
நிறைய பிடிக்கும்.. எல்லாமே பிடிக்கும்.. இன்னும் என்னன்னவோ பிடிக்கும்..

அதெல்லாம் ஒரு காலம்.. இப்போ அவனுக்கு எதுவுமே பிடிக்காம போச்சு..
ஏன்னா.. அவனுக்கு இப்போ, அவள மட்டும்தான் பிடிக்கும்!


நல்ல பையன்..
நல்லாதான் இருந்தான்..
நல்லா மொக்க போடுவான்..
ஜாலியா ஊர் சுத்திட்டிருப்பான்..
நிம்மதியா தூங்கிட்டிருப்பான்..

அவள பாத்ததிலருந்து மொத்தமா மாறிட்டான் -
எல்லாமே ராயல்-தான்..
பஸ் பார்த்தா மூஞ்சிய திருப்பிக்கிறான்.. புது பைக் வாங்கி ஊர சுத்தி திரியிறான்..
டீ கடை அக்கௌன்ட் கூட முடிக்கல.. காபி டே-ல காசை காபி-யா செலவு பண்றான்..
தூங்கவே மாட்டேன்றான்.. மொட்டைமாடில குப்புறபடுத்து, காத்துல ஏதோ வரைஞ்சிட்டிருக்கான்..
சாப்ட வரலைன்றான்.. பசிக்கிறதே இல்லேங்கிறான்.. ரெண்டு இட்லி-ய ரெண்டு மணி நேரம் திங்கிறான்..
கூட்டத்த பாத்தா ஓரமா ஒதுங்கிடறான்.. மொக்க போடாதீங்கடானு அட்வைஸ் பண்ணிட்டு போன்ல கடலைய ஆரம்பிச்சுடறான்..

ஒரு வேளை "காதல்"-ல கவுந்துட்டானோ?
இதெல்லாம் ஒரு கேள்வியா?
தமிழ்படம் பார்த்திருக்கிற கைக்குழந்தை கூட சொல்லும் - அந்த 'எழவு'லதான் விழுந்துட்டான்-னு!!

நண்பனாச்சே.. விழுந்துட்டான்-னு விட்டுட முடியுமா?
எவ்ளோ ஆழத்துல இருக்கான்-னு தெரிஞ்சிகிடலாம்னு ஒரு ஆர்வம்..
எப்படியாவது அவன மாத்தி திரும்பவும் ஜாலி life-க்கு கூட்டிட்டு வந்துடலாம்னு நம்பினேன்..


மொட்டைமாடி தண்ணிதொட்டி-ல அவன மடக்கி புடிச்சேன்..

" மச்சி.. டேய்.. என்னடா பண்ற இங்க, மதியம் ஒரு மணி வெயில்ல?"

"சும்மாதான்.. காத்து வாங்கிட்டிருக்கேன்.."

"இது என்னடா புதுசா இருக்கு? வழக்கமா Fan-லதான் காத்து வாங்குவோம்.. நீ Phone-ல வாங்கிகிட்டிருக்க..?!!"

 "மச்சி.. மொக்க போடாதடா.. நான் already moodout-ல இருக்கேன்டா.."

பையன் ஏதோ கோபமா இருக்கான்.. அவ கூட சண்ட போட்டிருப்பான்-னு நெனைக்கிறேன்.. இதுதானே சரியான நேரம்!
ஏதாவது சொல்லி அவன வழிக்கு கொண்டு வந்துடலாம்னு தோணிச்சு!


"என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?"

"ம்ம்.. எதை சொல்றது உன்கிட்ட..? நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ நாளா பழகிக்கிட்டிருக்கோம்-னு, உனக்கு தெரியாததா?? நீதானே எனக்கு முதல்நாள்ல இருந்து ஹெல்ப் பண்ணிட்டிருக்க..
எனக்காக கார்டு செலக்ட் பண்ணி குடுத்து.. அத நீயே எனக்காக அவகிட்ட ரிஸ்க் எடுத்து கொண்டு போயி நீட்டி.. அவ உன்ன தப்பா புரிஞ்சிகிட்டு செருப்ப காட்டி.. அதவேற அவ அண்ணன் பாத்துட்டு, உன்ன தனியா பிடிச்சு பின்னி பெடலெடுத்தானே.. அப்புறம் உங்க வீட்ல கூட உன்ன காறி துப்.. "

"டேய்.. நிப்பாட்டு.. இப்போ எதுக்கு என்னை போட்டு வாங்குற?? உன் பிரச்சின என்னன்னு மட்டும் சொல்லு.."

"மச்சி நீ தியாகிடா.. எனக்காக எவ்ளோ அடி தாங்கிருக்க??"

இவனுக்கு என்ன ஆச்சு? அவ அண்ணன்-ட்ட அடி வாங்கி ஆஸ்பத்திரி-ல படுத்திருக்கும்போது கூட.. எப்டி இருக்கேன்-னு ஒரு தடவ கூட கேக்கலையே.. ஆர்வமா ஓடி வந்து, 'அவ என்ன பதில் சொன்னா'-னுதானே கேட்டான்.. இப்போ எதுக்கு இப்டி பிழியிறான்..?!

நான் சந்தேகத்துல கேட்டேன் - "மச்சி.. தண்ணி-கிண்ணி போட்டிருக்கியா?"

"இல்லடா மச்சி.. purse வச்சிருக்கியா.. போலாமா??"

அய்யயோ.. இப்பவே டயலாக் அள்ளி தெளிக்கிறான்.. இதுல தண்ணி வேற அடிச்சான்னா நான் தொலைஞ்சேன். இங்கயே சமாளிப்போம் அவன..

"என்னடா ஆச்சு.. அவகூட சண்ட போட்டியா?'

"ஆமா மச்சி.. பிரச்சினையே இல்ல மச்சி.. ஆனா சண்ட வந்துடிச்சி.. அது என் தப்பா.. இல்ல அவ தப்பா-னு தெரியாம குழம்பி போயிருக்கேன் மச்சி.."

"அத சொல்றதுக்குதானடா நான் வந்திருக்கேன்.. நீ என்ன பிரச்சினைன்னு சொல்லு.. தூக்கிடலாம்"..

"கேளு மச்சி..நேத்து பார்க் போயிருந்தோம்.. பேசிட்டிருக்கும்போது அவகிட்ட ஒரு சின்ன விஷயம் கேட்டேன்.. அதுக்கு போயி செருப்ப காட்டிட்டா.."

"டேய்.. நீ ஏன்டா பப்ளிக்-ல வச்சு இப்டி கேக்கற? இதெல்லாம் தப்பில்லையா?"

"மச்சி.. நீ நெனைக்கிற மாதிரி அப்டி ஒன்னும் கேக்கலடா.. Photo எடுக்கும்போது கொஞ்சம் சிரிக்க சொன்னேன்.. அதுக்குபோயி செருப்ப காட்டிட்டா மச்சி.."

ஓ.. உனக்கும் செருப்பா!! மனசுக்கு சின்ன நிம்மதி.. Same Blood! வெளிக்காட்டாம கேட்டேன் -

"டேய்.. பொய் சொல்லாத.. சிரிக்க சொன்னா எதுக்கு செருப்ப காட்றா? நம்ப முடியலையே.. உண்மையா சொல்லு, என்ன நடந்துச்சி?"

"ஆமா மச்சி.. என்னாலயும் நெறைய நம்ப முடியல.. நான் பாத்த எந்த தமிழ்படத்திலயும் இந்த மாதிரிலாம் நடந்ததே இல்ல.. ஆனா ஏன் இப்டி நடக்குதுன்னு புரியவே மாட்டேங்குது.. வாழ்க்கையில என்...... "

"டேய்.. நிப்பாட்டு. தத்துவம் பேசாத.. என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு.."

"இல்ல மச்சி.. சொன்னா நம்ப மாட்ட.. ஆரம்பத்தில நல்லாதான் போயிட்டிருந்தது.. 
அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துக்கும் சண்ட போட ஆரம்பிச்சுட்டா..  
அவளுக்கு நான் பண்ற எதுவுமே பிடிக்க மாட்டேங்குது..
போன் பண்ணலைனாலும் பிடிக்கல.. போன் பேசிட்டே இருக்குறதுக்கும் பிடிக்கல..
செலவு பண்ணினாலும் பிடிக்கல.. செலவு பண்ணலைனாலும் பிடிக்கல..
ஆட்டோ-ல போறதுக்கும்  பிடிக்கல.. பைக்-ல போறதுக்கும்  பிடிக்கல..
பைக் வேகமா ஓட்டினாலும்  பிடிக்கல.. மெதுவா ஓட்னாலும்  பிடிக்கல..
சட்டையில பட்டன் போட்டாலும்  பிடிக்கல.. கழட்டி விட்டாலும்  பிடிக்கல..
நான் ரொம்ப சாப்ட்டாலும்  பிடிக்கல.. கம்மியா சாப்டாட்டாலும் பிடிக்கல..
அவள கொஞ்சினாலும் பிடிக்கல.. கொஞ்சலைனாலும்  பிடிக்கல..
பிடிக்கல.. அவளுக்கு எதுவுமே பிடிக்கல.. என்ன பண்ணினாலும் பிடிக்கல.. "

நல்ல சகுனம்தான்.. அவனோட பிரச்சினை அவனுக்கு புரிஞ்சிடுசினு தோணிச்சு..
"மச்சி.. அத விட்ரா..  இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இன்னும் நீ சொல்லல.."

"சொல்றேன் மச்சி.. 
காலைல பார்க் போயிருந்தோம்..  பேசிட்டிருந்தப்போ திடீர்னு தோணிச்சு.. 
அவகிட்ட கேட்டேன் - 'உன்ன ஒரு போட்டோ எடுத்துக்கவா?'
'hey.. எதுக்கு போட்டோ-லாம் எடுக்கற? நான்தான் உன்கூடயே இருக்கேனே'
'கரெக்ட்-தான்.. இருந்தாலும் தனியா இருக்கும்போது உன்ன பார்த்துப்பேன்ல..'
ரொம்ப நேரம் பேசி, ஒரு வழியா சம்மதிச்சா.. போன் கேமரா-ல அவள focus பண்ணிட்டு..
'Camera-வ கொஞ்சம் பாரு.. Light-aa சிரி'-ன்னு சொன்னேன்..
'இல்லடா.. எனக்கு tired-aa  இருக்கு.. அப்டியே எடு..'
'நீ சிரிச்சா எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா.. கொஞ்சமா சிரியேன்..'
'அப்போ.. என்ன சொல்ல வர்ற? இப்போ நான் அழகா இல்லைன்றயா?'
'ச்சே ச்சே.. நீ எப்பவும் அழகுதான்.. உன்ன எப்பிடி எடுத்தாலும் அழகுதான்!' (எப்படியிலாம் பொய் சொல்லிருக்கான்..!)
ஒரு வழியா சமாளிச்சு photo எடுத்து முடிச்சேன்.. Photo பாத்துட்டு அவ கேட்டா..
'நல்லா இருக்கா போட்டோ? Ear rings கரெக்ட்-ஆ வந்திருக்கா..?'
'நீயே அழகா இருக்கும்போது.. நான் ஏன் அதெல்லாம் பாக்க போறேன்..'
'உனக்கு ஏன், நான் என்ன புதுசா போட்டாலும் பிடிக்க மாட்டேங்குது?'
'இது என்னடா வம்பா போச்சு.. நான் பிடிக்கலைன்னு சொல்லல.. ஆனா..'
'அப்போ.. நீ பிடிக்கலைனா சொல்ல மாட்ட?'
'இல்ல.. நீ ஏன் எல்லாத்தையும் வேற மாதிரி புரிஞ்சுக்கற? நான் என்ன சொல்..'
'நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நேத்து கூட என்னோட புது watch பாத்துட்டு ஒண்ணுமே சொல்லல..'
'அடடா.. அது புது வாட்சா? பாத்தியா நீ சொல்லவே இல்ல...'
....... டண்டணக்கா டணக்குணக்கா.. டண்டணக்கா டணக்குணக்கா ...
கொஞ்சம் நேரத்துல அவ ஏறி பேச.. நான் எகிறி பேச..
கடைசில செருப்பு அவ கைக்கு வந்துடிச்சி மச்சி.. "

"அடப்பாவி.. இதெல்லாம் நீ குடுக்கற இடம்தான்.. என்னதான் இருந்தாலும் அவ இப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாது..
இவ்வளவு நடக்கற வரைக்கும் நீ என்னடா பண்ணிட்டிருந்த?"

"""Sorry சொல்லிட்டு.. night போன் பண்றதா சொல்லிட்டு வந்துட்டேன் மச்சி.."

"இப்போ என்ன முடிவு பண்ணிருக்க? இதெல்லாம் சரி இல்ல.. நல்ல முடிவா சீக்கிரம் எடு.."  

"என்னன்னே தெரியல மச்சி.. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.. 
சிலநேரம் அவ பண்றது சரிதான்னு தோணுது.. எதுக்கு என்கிட்ட சண்ட போடுறா? கோபம் இருக்கற எடத்துலதானே மச்சி குணம் இருக்கும்..
என் மேல அளவுக்கதிகமா பாசமா இருக்காடா.. நான் எல்லாத்தையும் ரசிக்கணும்னு நினைக்கிறா.. 
நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவள பத்தியே இருக்கணும்னு ஆசைபடுறா மச்சி.. அதான் குழப்பமா இருக்கு.. ஏன் மச்சி என் மேல இவ்ளோ பைத்தியமா இருக்கா..?? "

அடடா.. கடவுளே.. இவன் இன்னும் மாறலை..
இது முத்தி போயிடுத்து.. பையன் ரொம்ப ஆழமா இறங்கிட்டான்..
இதுக்கப்புறமும் advise பண்ணி அவன திரும்ப கொண்டு வர முடியாது..
அப்டியே பண்ணாலும், தாடி வளர்த்து தெருத்தெருவா கவிதை எழுத ஆரம்பிச்சுடுவான்..
(already நம்ம போடுற மொக்கையே தாங்க முடியல..)
Bachelor Life-a Enjoy பண்றதுக்கு, இவன் குடுத்து வச்சது அவ்ளோதான்..

அப்போ என்னதான் பண்றது?
ம்ம்.. அவன மாத்த முடிய முடியலைனா.. நாம மாறிட வேண்டியதுதான்..!

சமாதானமா சொன்னேன் -
"விட்ரா மச்சி.. இதெல்லாம் சகஜம்தான்.. 
ஒரு தடவைதான் மச்சி.. பொண்ணுங்க கோபப்படுவாங்க, கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.."

"அப்போ.. இனிமே என்கிட்ட கோபப்படவே மாட்டா-ன்னு சொல்றியா??"

"மச்சி.. பழகிடும்டா..!"


Enjoy the life,
Nimal

Monday, February 20, 2012

TERROR -- Together, we are making ERROR??


Terror incidents - which always grab everyone's high attention and make every citizen to feel for the victims.
Everyone of us desperately wants "someone" to take "some action" to stop these tragedies happening..
Of course, We have to stop this for sure.
Those responsibilities usually get assigned to "someone", so called high diplomats who exchange series of hot reports, evidences, agreements, etc etc with other countries. They always do the best that they can do.
But we all know, the terror acts never brought to an end and no one ever able to arrive at the solution.
They tried every possible options - More military? - More fund?? - More surveillance???
NO.. hardly helps. So it is time to think about an amicable solution..

The real question we are dealing here is - Is the terror caused by the error that we make together?

Before pitching into main topic, will present a set of questions that I came across recently.. which subsequently triggered a spark in mind after a while.
- Are you a racist? My answer was no
- Do you support Caste? My answer was no
- Are you a religionist? My answer was no
- Are you Patriotic? My answer was YES, of course!

(Thanks to DV for throwing these questions at me..)
At the first time, I thought that these questions were crazy and particularly my mind did not accept to combine the patriotic question with other three questions.
becoz, Being-Patriotic is not that bad to compare with other three - Isn't it?

--

Lets have a few mins of flashback -
Hope we all remember the internal problems that we faced for years and years in the history.. and even now in some cases. To point out those internal problems clearly - Race, Caste and Religion..

Today, Racism exists only in the school lessons and most of the current generation never experienced it in the recent past. All the credits goes to the rightly called 'leaders' who did a real good job to vanish it completely from our society. This is real good news becoz we had one less problem in bringing people together. This is kind of great achievement for a developing country..

Next, we will talk about Caste systems. It is the right time where we understood the importance of removing it from our society. We do not need to argue about its pros and cons. In fact, we have learnt enough about it's negative impacts on the people unity from various happenings.
Those were painful days when we had stuck in the home/school for the entire day because of sudden clashes between two different groups. Perhaps, most of the times, the exaggeration of individual's disputes had been the root of these clashes.
btw, the situation is much improving day-by-day and we have almost attained an important milestone by erasing the caste from individuals' Name. Hopes are high to completely vanish it from our society in coming years.

Religion is another big question while talking about internal problems. We are yet to travel a bunch of generations to get comfort level in this area. At present situation, everyone of us has drawn a boundary around us and we don't ever allow anyone else to breach the boundary.
btw, we are not going to argue whether religion is good or bad.
[In fact, I myself had insisted to follow the religion for various good reasons - in my first post.]
But one thing which we need to agree within ourselves is - Not to disturb others' belief..
I guess, most of us already learnt it and we just need to pass it to next generation..

Why are we talking about all these? It's becoz we all know that society is highly sensitive for these three things and when this sensitivity is misused by criminals, it creates a huge problem.
In fact, these criminal acts too should be considered as terror incidents. Lets link these factors with Terrorism in broader perspective..!

Lets take a deep breath and we will continue here to derive the solution for the subject.

We realized the benefits when we break the disparity in races, castes and religions. So it's clear that we can reap benefits when we start removing the differences among us.
Why can't we try removing the differences among people across the border?

In today's situation,
If we two individuals are fighting in the street, we are not trying to make it a caste dispute or religion clashes.
Perhaps, we are trying to avoid those disputes and not encouraging them to proceed..
But when it comes to dispute between countries, we don't try to avoid the problems, instead we start loading the bullets.. and by default the military budget gets doubled..
We are not arguing whether this approach is right or wrong. But this is what our mindset is..

With a positive thinking approach, Lets think about how we managed to solve the caste/religion problems.
In history, we had seen people choosing the violence for resolving the local disputes. Did that ever helped?
The violence never helped and can never help to bring the dispute to an end, instead it actually fuels the dispute and makes it a never ending one.

We should start applying lessons that we learnt in our lifetime & from the history, for solving the problems across borders. Military action is never going to help to find the ultimate solution, Perhaps it is going to increase the discomfort and we might end up having more terror attacks.
So, if military is not the answer, what else could be the solution?

well.. Love and Friendship!
Wait.. we are NOT going to discuss about the world peace and spreading the peace everywhere..
Let us quickly go through few practical scenarios to compare..

When different set of people get a chance to live together in a same place, they started understanding each others' custom and their habits. We learn to adjust with others and we learnt to respect others.
So, hats off to urbanization!
[Though I don't support the urbanization for various reasons, I strongly support it for providing opportunity to get to know each other.. The more we get introduced to others, the more we understand people and their customs.]

Another very interesting factor is Love marriages!!
Love marriages are contributing differently on this topic. Both ways - towards and against!
Few years back, when a love marriage involved two different parties, it always resulted in problems between families, backed by castes/religion groups. Love marriages were seen as troublesome event and no one liked to think otherwise.
But we, the current generation, slightly changed the show and people now started accepting the love marriages. At the least to expect, love marriages are not always creating problems among parties and it is no more seen as a troublesome event.
Though we are not 100% ready to accept the mixture of cultures, it is a good start and we can expect the next generation to drive it towards the must-needed 100% acceptance.

Friendship among folks & families from different parties is also contributing to ease the disputes among them. The schools and colleges are completely erasing the differences among the new generation.
This is contributing more and more to reduce the gaps among caste/religions and to bring people together by breaking the barriers.

Back to Patriotism -
Why do we always treat 'patriotism' only for fighting with other nations? Why don't we ever try to build friendship among families across countries? Why we are not ready to encourage love marriages across LoC?
Becoz we feel bad about it.. Our mind/heart are not accepting it.. is that correct?

Exactly..! this is how our ancestors went against love marriages across castes and religions. Their mind/heart never accepted the love marriages..
If we believe that they did a mistake, then we should also realize that we are also doing the same mistake by not accepting love across countries.

If we realize that urbanization helped us to remove differences within us, why not globalization can help us to remove differences among human beings around this world?

We should create an environment where students from multiple countries get into a common place and come out without differences. We should create a friendly environment by bringing different families together and by encouraging the share of love and friendship across the countries. And so on..
And the ultimate aim is to bring everyone together and let them understand and respect each other.
If this is achieved with the help of upcoming generations, then we might not require to upgrade our weapons day by day!

No differences! - No violence!! - No Terror!!!

Of course, it is not a conclusion but an opinion!


Enjoy the life,
Nimal.


By the way, coming to an important point -
Hope we all well understood the need for cross-country love & friendship.. Now the most important thing is - Becoming one of the role-models to the next generation.
I swear, I want to be one of those examples!!
I'm right now at United States and I'm looking for a cross-country Love.. Preferably from India! :)

Tuesday, February 14, 2012

இதுதான் காதல் என்பதா..??!

[Disclaimer: இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்கவும்]

சின்னவனா இருந்தப்பவே ஊர் சுத்த பிடிக்கும்
College cut அடிச்சுட்டு லோ லோனு சுத்திருக்கேன்
அதனாலேயோ என்னவோ..
ஊர் சுத்தரதையே வேலையா வாங்கிருக்கேன்   
பெரிய Bank-ல  Marketing Rep வேலை -
Weight-aana pocket-aa பாத்து வேட்டு வைக்கறதுக்கு
சம்பளம் + incentives வேற..  

மதியம் உச்சி வெயில்.. 
பைக் ஓட்டிட்டு வந்து tired-ல, சாப்டலாம்னு 
அந்த முக்கு கடையில ஒதுங்கியிருந்தேன்.

First time-
உன்ன அந்த முக்கு கடையில வச்சுதான் பாத்தேன்..
கடைசியாதான் வந்த நீ..
almost அந்த time-ல சாப்ட்டு முடிச்சிருந்தேன்..

அன்னைக்கு பாத்தவுடனே, 
மனசுக்குள்ள மின்னல் அடிச்சது-னுலாம் பொய் சொல்ல மாட்டேன்.
but தோணிச்சு.. பாத்தவுடனே தோணிச்சு.. 
கொஞ்சம் wait பண்ணி போகலாம்னு தோணிச்சு..
ஹோட்டல்காரன் நெனச்சிருப்பான் -
"கொட்டிகிட்டாச்சுனா கிளம்ப வேண்டியதுதானே.."
"................... ஒரு  நல்ல  item வந்துட  கூடாது.." 
".................... உக்காந்த  எடத்த  விட்டு எந்திரிக்க மாட்டானுங்க"


கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தேன்.. 
ஏதோ ஒரு difference உன்கிட்ட.. 
என்னனு புரியல.. ஆனா அது பிடிச்சிருந்தது..
அப்டியே பாத்துட்டே இருக்கலாம்னு தோணிச்சி
but எவ்ளோ நேரம்தான் சும்மா கடையில உக்காந்துட்டு  இருக்கறது
சாப்ட ஆரம்பிச்சேன்.. 
already heavyaa இருந்தும், கண்டுக்காம சாப்ட ஆரம்பிச்சேன்
அன்னைக்கு பிடிச்சிருந்தது.. 
எல்லாமே.. உன்ன அன்னைக்கு பாத்தது.. பாத்துட்டே சாப்டது.. 

இன்னும் கொஞ்ச நேரம் சாப்ட்டிருக்கலாம் 
but already bill கொண்டு வந்து வச்சு பத்து நிமிஷம் ஆச்சு 
இதுக்கு மேலயும் try பண்ணினா owner கழுத்த சேத்து.. 
வேணாம் விட்ரலாம்.. போதும்.
மனசே இல்ல கிளம்பறதுக்கு ..
மறுபடியும் உன்ன எப்டியாவது try பண்றதுன்னு, 
முடிவு  பண்ணிட்டு கிளம்பினேன் ..

அன்னையிலருந்து தினமும் வருவேன்.. 
evening  office முடிஞ்சதும் நேரா, 
அந்த கடை முன்னாடிதான் நிப்பேன்..
but ஒரு நாள் கூட அதுக்கப்றம் உன்ன அங்க பாக்க முடியல..

ஒரு நாள்.. விரக்தியின் உச்சத்துல, 
யார்டயாவது விசாரிச்சுடலாம்னு decide பண்ணேன்.
ஹோட்டல்ல இருக்கற பையன 
மளிகை கடையில வச்சு பிடிச்சேன்..
உன்ன பத்தி அடையாளம் சொல்லி கேட்டேன்.. 
அவனுக்கு சரியா புரியல..
ரொம்ப நேரம் explain  பண்ணேன்.. 
but அவன் ஒரு வார்த்தை கூட பேசல

அவன சொல்லி குத்தமில்ல.. 
அவன் கடையில daily கலர் கலரா items வந்து போகும்.. 
அவனுக்கு எல்லாமே ஒரே மாதிரிதானே.. 
specific-aa கேட்டா அவனுக்கு எப்டி தெரியும்?

இருந்தாலும், 
தெரியாதுனாவது சொல்லிருக்கலாம்
ஒரு வேளை.....  
அவன் ஊமையா??

Life-la எதையோ miss பண்ணிட்டமோ-னு நெனச்சி குழப்பமா உக்காந்தப்போ..
அந்த மளிகை கடையில பொட்டலம் போடுற பையன் சொன்னான் -
"அண்ணே, அந்த பையனுக்கு தமிழ் தெரியாது.."
".............. Hindi-la பேசுங்க புரியும்"
அடடே.. இது தெரியாம அவன பிடிச்சு உக்கார வச்சு,
ரெண்டு மணி நேரம் கதற கதற மொக்க போட்டுட்டேமே..

நமக்கும் Hindi-kumdhaan  ரொம்ப தூரமாச்சே..
So, என்னோட next mission - எப்டியாவது Hindi படிக்கறது..!

வீட்டுக்கு போயி -
முடிஞ்ச அளவுக்கு hindi movies போட்டு போட்டு பாத்தேன்.. ஒண்ணும் புரியல..
doordarshan-la எல்லா serials-m உக்காந்து பாத்தேன்.. கொஞ்சம் கூட புரியல..
அப்போதான் தோணிச்சு - Smart work is better than hardwork!
இவ்ளோ கஷ்ட படுறதுக்கு பதிலா..
அந்த பையனுக்கு தமிழ் கத்து குடுத்துடலாம்னு தோணிச்சி..
ச்சே.. அது இன்னும் கஷ்டம் - இல்லைனா.. 
Hindi தெரிஞ்ச யாரையாவது வச்சு adjust பண்ணலாம்னு தோணிச்சி! 

மறுபடியும் மளிகை கடை போனேன்.. 
அண்ணாச்சிய பிடிச்சி Hindi தெரியுமான்னு கேட்டேன்.. 
"radio-la cricket score கேட்டு சொல்ற அளவுக்கு தெரியும்"-னு சொன்னாரு
எனக்குள்ள ஒரு வெளிச்சம்..!! 
இது போதும்னு தோணிச்சு.. 
cricket score correct-aa கேட்டு சொல்ற அண்ணாச்சி,
உன்னையும் correct-a கேட்டு சொல்லிடுவாருனு நம்பிக்கை வந்துச்சி..!

அடுத்து எப்போ ஹோட்டல்பையன் சரக்கு வாங்க வருவான்-னு விசாரிச்சேன்..
செவ்வாய்கிழமை லீவ் போட்டுட்டு, அந்த hindiwala-va market-la மடக்கி பிடிச்சேன்
அண்ணாச்சி, Bhaiyya, அப்புறம் பாவமா நான்..
எலோரும் ரெடி - 
எங்களோட multi-language group discussion-a ஆரம்பிச்சோம்..

அண்ணாச்சிட்ட அடையாளம் சொன்னேன்..
ஒவ்வொரு வார்த்தையா translate பண்ணி 
கஷ்டப்பட்டு பேசிட்டிருந்தார் ..
first ரொம்ப smooth-aadhaan போயிட்டிருந்தது..
but, போக போக நிலைமை serious ஆகிடுச்சி..!
அந்த பையன் 1hour ரொம்ப பொறுமையா
அண்ணாச்சியோட Hindi-ய கேட்டுடிருந்தான்..
ஆனா அவர் கேட்க வந்தது புரிஞ்சவுடனே கொடூரமாயிட்டான்..
ஒரு 20mins.. பேசினான்.. விடாம பேசினான்..
ரொம்ப force-aa பேசினான்
பேசி முடிச்சுட்டு.. கெளம்பி வேகமா போயிட்டான்.

நான் exam result-ku wait பண்ற student மாதிரி,
அண்ணாச்சியோட மூஞ்சிய பாத்துடிருந்தேன்..
அண்ணாச்சி கொஞ்சம் கோபமா இருந்தாரு..
"என்ன அண்ணாச்சி? hindi-la அசிங்கமா திட்டிட்டானா?" - கேட்டேன் 
அவர் திரும்ப என்னைய திட்டி  இருந்தா கூடமன்னிச்சிருப்பேன்.. 
but அண்ணாச்சி கடுப்புல சொன்ன பதில் - 
"என்ன சொன்னான்னு புரியலையேப்பா"

எனக்கு செம்ம  கோபம் - நியாயமா நான்தானே கோபப்படணும்?
இவ்ளோ நேரம் தலையாட்டி கேட்டுட்டே இருந்துட்டு 
கடைசில ஒண்ணுமே புரியலைன்றாரு..
கோபத்த control பண்ணிக்கிட்டு கேட்டேன் -
"என்ன அண்ணாச்சி, ஒரு வார்த்தை கூடவா புரியல?"
மறுபடியும் அண்ணாச்சி கடுப்புல -
"ஏதோ 'dho baje', 'dho baje'-னு சொல்லிடிருந்தான்.. பாவிப்பய..
கடைசில சரக்கு வாங்காம போயிட்டான்"

அண்ணாச்சியோட கடுப்புக்கு பின்னாடி இருந்த reason புரிஞ்சது
அதே நேரம், எனக்கு நான் பாத்த doordarshan serial help பண்ணிச்சு..
'dho baje'-means ரெண்டு மணி..!!

உனக்கும் ரெண்டு மணிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு வேளை நீ 2 மணிக்கு இருப்ப-னு சொல்றானா???

இருக்கலாம்.. ஏன் இருக்க கூடாது??
எல்லா வழியிலயும் try பண்ணிடலாம்-னு 
நாளைக்கு correct-aa 2  மணிக்கு 
hotel போயிடலாம்னு முடிவு பண்ணேன்..

தேடல்-னு ஒண்ணு இருந்தாதானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்!!
நாளைக்கு புது நம்பிக்கையோட உன்ன தேடி வர போறேன்..
இன்னைக்கு எப்டியும் தூக்கமே  இருக்காது எனக்கு -
இந்த இரவு, கனவுகள் நிறைந்த கனத்த இரவு!

நான் ஏன் இப்டி உன்ன தேடுறேன்?
அப்டி என்ன உங்கிட்ட எனக்கு பிடிச்சது?
எனக்கே தெரியல..
நெறைய பேர பாத்திருக்கேன்.. try கூட பண்ணிருக்கேன்..

சில பேர் sweet-aa பேசுவாங்க.. பிடிக்கும்..
சில பேர் kaaram-aa முறைப்பாங்க.. அதுவும் பிடிக்கும்
but அவங்க மாதிரியே இல்ல நீ..
அந்த ஒரு difference-தான் என்ன இப்டி சுத்த விட்டுடிச்சு!

இத்தன வருஷமா life-la waste பண்ணிட்டேனோ??
உன்ன பத்து வருஷம் முன்னாடி பாத்திருந்தாலும் 
இப்டிதான் சுத்திட்டு இருந்திருப்பேனா?
ஏன் இந்த மாதிரி கேள்விகள் மனசுக்குள்ள கெளம்புது? 
இப்டியே யோசிச்சிட்டு இருக்கும்போது..
பின்னாடி FM-ல background song..... -
இதுதான் காதல் என்பதா??

ம்ம்.. இப்போதைக்கு 
அத காதல்னு சொல்ல மாட்டேன்.. 
அதற்கான தேடல்னு சொல்லலாம்!
அட.. திடீர்னு கவிஞன் மாதிரி பேசறேனா?
காதல், தேடல் - ரெண்டுமே ஒரு மனசை
easy-aa கவிதை எழுத வச்சுடுமே..!

நாளைக்கு உன்ன கண்டிப்பா பாக்க முடியுமான்னு தெரியல..
இருந்தும் என்னோட மனசு இப்பவே கெடந்து அடிச்சுக்குது
அந்த powercut ஆன night-la
வேர்வை சொதசொதப்பில
கொசுக்கடிலாம் மறந்து 
கருப்பு வானத்த
வெறிச்சு பாத்து
கவிதை வரைஞ்சேன் -

"""
   jillunu நீ 
   empty-aa நான் 
   பக்கத்துல பல-காரம்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""

எழுதி முடிச்சப்ப முழிச்சுட்டேன்..
இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சதே இல்ல
கெளம்பி tea கடை போயி, தினத்தந்தி-ல 
ராசிபலன் பேப்பர் தேடி திருப்பினேன்

என்னோட ராசி தேடி வாசிச்சேன் -
"காரியம் கை கூடும்"

tea கடை தாத்தா கிட்ட சொன்னேன் -
"தாத்தா.. உன் பேப்பர் மட்டும் correct-aa  சொல்லிச்சுன்னு வை...."
"........ நாளைக்கே உன் கணக்கு settle பண்றேன்"
  
2 மணி எப்போ ஆகும்னு காத்துட்டிருந்தேன்
கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் நடுக்கம், நெறைய பதட்டம்

சரியா 1.55 - ஹோட்டல் போயாச்சு..
Bike கண்ணாடியில personality check பண்ணிட்டு
ஜன்னல் வழியா எட்டி பாத்தேன்...

என்னால நம்பவே முடியல!
yes - நீதான்.. நீயேதான்..
தினமும் 2  மணிக்கு இங்க இருப்பியா?
இப்டின்னு தெரிஞ்சிருந்தா 
மொத்த office-ayum 
இங்க மாத்திருப்பேனே!

எப்டி ஆரம்பிக்கலாம்?
போதும். wait பண்ணினது போதும்..
இதுக்கு மேல wait பண்ண முடியாது..
நேரா போயி கேட்டுட வேண்டியதுதான்..

நேரா போயி seat புடிச்சு உக்காந்துட்டேன்
கொஞ்ச நேரம் straight-aa உன்னையே பாத்துடிருந்தேன்
WAIT ----  யார் அவன், உன் பக்கத்துல?
நான் உன்ன பாத்தா அவனுக்கென்ன? ஏன் மொறைக்கிறான்?
Hmm.. என்ன நடந்தாலும் பாத்துடலாம்.
பாத்துட்டே இருந்தேன்..

அந்த முரட்டு பேர்வழி ஹோட்டல்காரன கூப்ட்டு
ஏதோ காதுக்குள்ள சொன்னான்..
ஹோட்டல்காரன் என்னை வெறிச்சு பாத்தான்
நான் அதையெல்லாம் கண்டுக்கல..
விடாம உன்னையே பாத்துட்டே இருந்தேன்

ஹோட்டல்காரன் நேரா என்கிட்டே வந்தான்..
பக்கத்துல வந்து, "என்ன வேணும்"-னு கேட்டான்..

எங்க இருந்து எனக்கு இவ்ளோ தைரியம் வந்ததோ தெரியல..
நேரா உன்ன பாத்து கைய காட்டினேன்  -


....
...
...


அங்கே ஒரே அமைதி -

ஹோட்டல்காரன் திரும்பி
சிரிச்சிக்கிட்டே சத்தம் போட்டு சொன்னான்..
'bhaiyaa.. sir-ku தயிர்சாதம்..'

அடடா.. உன்னோட பேர் "தயிர்சாதம்"!!! 
பேர் கேட்ட உடனே எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு..
எனக்கு பேர் ரொம்ப பிடிச்சிருந்தது!!

சத்தம் போட்டு கேட்டேன் -
"அப்டியே.. கொஞ்சம் ஊறுகாய் சேத்து கொண்டு வாங்க"

என்னோட "தயிர்சாதம்" தேடல், ஒரு முடிவுக்கு வந்திச்சு!
எனக்கு கனவுல எழுதின கவிதை ஞாபகம் வந்தது..

"""
   jillunu நீ
   empty-aa நான்
   கொஞ்சம் ஊறுகாய்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""
இதுதான் காதல் என்பதா..??!
Happy Valentines Day!! 

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்

Sunday, January 1, 2012

சாமி-ய பிடிக்கல [short story]


நாளைக்கு பிறந்தநாள்.. மறுபடியும் அந்த நாள் வர போகுது..
போன வருஷம் எடுத்த புது சட்டைதான் இப்போ நான் போட்டிருக்கறது..
Trouser-la ஒரு பொத்தான் மட்டும் விழுந்துடிச்சு.. அதை எடுத்து பாக்கெட்-ல போட்டு வச்சிருந்தேன்.. இப்போ கொஞ்ச நாளா அதையும் காணோம்..

போன பிறந்தநாளைக்கு பள்ளிக்கூடம் போகல.. அப்போ சேத்துவிடல..
நாலு வயசுக்கு அப்றம்தான் பள்ளிக்கூடம் சேர்க்கணும்னு வாத்தியார் சொல்லிட்டாரு.. அதனால வீட்லதான் இருந்தேன்..

பச்சை கலர் புதுசட்டை, அதே கலர்-ல trouser..
எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. இருந்தாலும் நான் கேட்ட வெள்ளை சட்டை, காக்கி trouser வாங்கி தரலை..
பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் வாங்கி தர்றதா சொல்லிட்டாரு அப்பா..
பக்கத்து வீட்டு ராஜு-வும் வினோத்-ம் தினமும் அதுதான் போடுறாங்க.. எனக்கு பாக்கும்போது ஆசையா இருக்கும்.
---

வீட்ல வெளிய உக்காந்து, சோத்து மணி அடிக்கற வரைக்கும் காத்துட்டு இருந்தேன்.. ராஜு, வினோத் கிட்ட புது சட்டைய காட்டுறதுக்கு..

ராஜு பாத்தவுடனே கேட்டான் - 'என்னடா கலக்கற.. புது சட்டையா ?'
'ஆமா.. இன்னைக்கு பொறந்தநாள்-டா.. நேத்து அப்பா டவுன் போயி வாங்கிட்டு வந்தாரு'
'பொறந்த நாள்னா chocalate தரனும்டா.. வச்சிருக்கியா?' - ராஜு கேட்டான்..

.... அடடா.. இது தோணவே இல்லையே-னு யோசிச்சுட்டே சொன்னேன் -

'ம்ம்ம்ம்..  நீ போன வாரம் வாங்கின ரப்பர் திரும்ப தரவே இல்ல.. அதுக்கு கழிச்சுக்கோ..'

ராஜு எதுவும் பேசாம வீடுக்குள்ள போயிட்டான்..
வினோத் chocalate இல்லைன்னு தெரிஞ்சு, முன்னாடியே வீடுக்குள்ள சாப்பிட போயிட்டான்..

..ம்ம்.. அடுத்து சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கணும் மத்த பசங்க கிட்ட சட்டை காட்டுறதுக்கு..
என்ன பண்றது அது வரைக்கும்?

வீட்ல எப்பவும் பாட்டி கூடயும் தங்கச்சி கூடயும்-தான் பொழுதன்னைக்கும் இருப்பேன்..
தங்கச்சி என்ன சொன்னாலும் தொட்டில்ல இருந்து குறு குறுன்னு பாத்துட்டே இருப்பா..
பாட்டிட்ட ஒரு நாளைக்கு பத்து தடவையாவது இதே கேள்விய கேட்பேன்.. -
'தங்கச்சி எப்போ பாட்டி என்கிட்டே பேசும்?'
பாட்டியும் ஒவ்வொரு தடவையும் சளைக்காம பதில் சொல்லும் - 'அடுத்த வருஷம் வாயாடியா பேசும்டா..'

பாப்பாவ ஆசையா தொட்டு தொட்டு பார்த்துப்பேன்.. அவதான் நான் தொட்டாலே அழ ஆரம்பிச்சுடுவா..
இதுக்காகவே அம்மா நல்லா என்னைய திட்டி விட்டுடும்..

பாட்டிக்குதான் நான் செல்லபிள்ளை.. அம்மாவ பொழுதன்னைக்கும் திட்டிட்டே இருக்கும்.. ஆனா என்னைய திட்டவே திட்டாது..
ரொம்ப நல்ல பாட்டி.. எனக்கு எப்பவும் அதுதான் காசு குடுக்கும்.. அம்மாக்கு தெரியாம பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கிட்டு வந்து தருவேன்..
பாட்டிக்கு ரோஜா மிட்டாய்னா ரொம்ப இஷ்டம்.. பல்லு இல்லைனாலும் விடாம சாப்பிடும்..
அது சாப்டுட்டு நாக்க வெளிய நீட்டி காட்டும்.. யார் நாக்கு நல்லா சிவக்குதுன்னு ஒரு போட்டி.. நான்தான் எப்பவும் ஜெயிப்பேன்!

போன பிறந்த நாளைக்கும் இப்டிதான்.. புது பச்சை சட்டை போட்டுட்டு பாட்டி கால்ல விழ சொல்லிச்சு அம்மா..
நான் போயி பாட்டி பக்கத்தில உக்காந்தேன்..
பாட்டி என் தலையில கை வச்சு வாய்க்குள்ள ஏதோ முனுமுனுத்துச்சி.. எல்லா பிறந்த நாளுக்கும் இப்டிதான் பண்ணி விடும்!
அப்புறம் சுறுக்கு பையிலஇருந்து காசு எடுத்து குடுக்கும்..
அன்னைக்கு எப்பவும் குடுக்கறதவிட 5 காசு ஜாஸ்தியா 15 ஜாஸ்தியா குடுத்திச்சு.. ரொம்ப ஜாலியா பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கி குடுத்தேன்..

அன்னைக்கு பாட்டி என்ன நெனச்சதோ தெரியல.. கைல வாங்கிட்டு ரொம்ப நேரம் சாப்பிடாம பாத்துட்டே இருந்தா..
நான் ஒவ்வொரு மிட்டாய முடிச்சுட்டு பாட்டிகிட்ட நாக்க நீட்ட சொல்லுவேன்.. ஆனா பாட்டி அன்னைக்கு முழுசும் அதை சாப்டவே இல்ல.. சாயங்காலம் என்னை கூப்பிட்டு தலைய தடவி கேட்டிச்சு -'பாட்டிக்கு பெரிய ஆளாகி என்னடா வாங்கி தருவ?'
'நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தரேன் பாட்டி' - பளிச்சுன்னு சொன்னேன்
பாட்டிக்கு கண்ணுல தண்ணியா வந்துச்சு..
-----

இன்னைக்குதான் அம்மா ஞாபகப்படுத்திச்சி.. நாளைக்கு உனக்கு பிறந்தநாள்-னு..
மறந்தே போச்சு.. இந்த தடவை அப்பாட்ட என்ன கேக்கறது-னு ரொம்ப நேரம் யோசிச்சிட்டே இருந்தேன்..

போன தடவை மாதிரி இல்ல.. நிறைய நிறைய மாறி போச்சு..
பள்ளிக்கூடம் சேந்துட்டேன்..
பாப்பா கொஞ்சம் வளந்துட்டா..  'ம்மா', 'ப்பா'-லாம் சொல்றா! என்கிட்டே அழறதே இல்ல.. நான் பேசினா சிரிக்கிறா..
பாட்டி இப்போலாம் வீட்லயே இல்ல.. ஆஸ்பத்திரில தூங்கிகிட்டே இருக்கு.. நெறைய பேசறது இல்ல..
'வீட்டுக்கு எப்போ பாட்டி வருவ'-னு கேட்டுட்டே இருக்கேன்.. பாட்டி பதில் சொல்லவே மாட்டேங்குது..
அம்மாவும் 'பாட்டிய தொந்தரவு பண்ணாத'-னு சொல்லிடிச்சு

காலைல எந்திரிச்சி குளத்துக்கு போயிட்டு வந்ததும்.. அப்பா பீரோ-லருந்து புது ட்ரெஸ்ஸ எடுத்து குடுத்தாரு..
புது வெள்ளை சட்டை காக்கி trouser ..! எனக்கு புடிச்சிருந்தது..!

அம்மா கூப்பிட்டு சாமி முன்னாடி விழுந்து கும்பிட சொன்னாங்க..

இது என்ன புது பழக்கம்? எனக்கு பாட்டி ஞாபகம் வந்துடிச்சு..
நான் பூஜை ரூம்ல எட்டி பாத்தேன்.. பாட்டி மாதிரி இல்ல இந்த சாமி..

சாமி அமைதியா நின்னுடிருந்தது.. நான் வந்தத கவனிக்கவே இல்ல..
நான் மெதுவா சிரிச்சேன்.. ஒன்னும் சொல்லல..
'சாமி..' கூப்டேன்.. ஒன்னும் சொல்லல..
கொஞ்சம் குனிஞ்சு நின்னேன்.. தலையில கை வச்சு எதுவும் சொல்லல..
அதுகிட்ட சுறுக்கு பையும் இல்ல..
கடைசி வரைக்கும் என்னை பாத்து சிரிக்ககூட இல்ல..
சாமி ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சுது..

அம்மாட்ட காசு கேட்டு வாங்கினேன்.. ராஜு-க்கும் வினோத்-க்கும் chocalate வாங்கி குடுக்கணும்-னு யோசிச்சு, அதுக்கும் சேத்து 30 காசு வாங்கிட்டு கடைக்கு போனேன்..
என்ன chocalate வாங்குறது-னு தெரியாம முழிச்சிக்கிட்டே ரோஜா மிட்டாயே வாங்கினேன்..
இந்த தடவை கடைக்கார தாத்தா புது சட்டைய பாத்து வழக்கமா குடுக்கறத விட நெறைய மிட்டாய் குடுத்தாரு.. கை நிறைய ரோஜா மிட்டாய்!
பாட்டிட்ட சொன்னது ஞாபகம் வந்தது.. பெரிய ஆளாகி நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தர்றதா சொல்லிருந்தேன்..
இப்போ இத குடுத்தா நெறைய சந்தோசப்படும்!


நேரா வீட்டுக்கு போனேன்.. ராஜு-கும் வினோத்-கும் மிட்டாய் குடுத்தேன்..
'என்னடா chocalate வாங்கலையா?' - ராஜு கேட்டான்
'எங்க பாட்டிக்கு ரோஜா மிட்டாய்தான் வாங்க சொல்லிச்சு'
..ம்ம்.. கொஞ்சம் யோசிச்சுட்டு..  'அப்போ எனக்கு ரெண்டு குடு..'-னு கேட்டு வாங்கிகிட்டான்
புது வெள்ளை சட்டை பத்தி அவன் கேக்கவே இல்ல.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி..

வீட்டுக்கு ஓடி போயி அம்மாட்ட கேட்டேன் - 'பாட்டிய எப்போம்மா போயி பாக்கலாம்?'
'நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்'
'இன்னைக்கு போலாம்மா.. நான் பாட்டிட்ட புது சட்டைய காட்டிட்டு மிட்டாய் குடுக்கனும்மா.. '
'பாட்டிகெல்லாம் குடுக்க வேணாம்..  உள்ள பூஜை ரூம்ல சாமிக்கு வை'

சாமிக்கு எதுக்கு ரோஜா மிட்டாய்?-னு கோபமா வந்தது..
மெதுவா போயி சாமி முன்னாடி மிட்டாய் வச்சேன்.. கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்தேன்..
'சாப்பிடு சாமி' - சொன்னேன்..  சாமி ஒன்னும் சொல்லல..
இது எப்பவும் இப்பிடிதான் அடம்பிடிக்கும்.. எதையும் சாப்பிடாது.. அம்மா இதுவரைக்கும் குடுத்த எதையும் சாப்ப்டதே இல்ல..
பாட்டியா இருந்தா சாப்டுட்டு நாக்கெல்லாம் காட்டும்-னு நெனச்சிகிட்டு, மிட்டாய திரும்ப எடுத்து பாக்கெட்ல போட்டுகிட்டேன்!

பாப்பா நல்லா தூங்கிடிருந்தா.. தொட்டில்ல எட்டி பாத்தேன்.. சேலைய ஈரம் பண்ணிட்டு அதுலயே தூங்கிட்டிருந்தா..
'குட்டீ' - கூப்பிட்டேன்!
சூப்பரா சிரிச்சுட்டே.. காலை உதைச்சி..  'ண்ணே'-னு சொன்னா..!
ஒரே ஆச்சர்யம்! முதல் முறையா என்னை 'ண்ணே'-னு கூப்டிருக்கா..!
பாட்டிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. எப்போ என்கிட்ட பேசுவா-னு..
இன்னைக்கு பேசிட்டா!
பாட்டி திண்ணை பக்கம் திரும்பி சத்தம் போட்டு சொன்னேன் -
'பாட்டி.. பாப்பா என்கிட்ட பேசறா பாட்டி..'

பாட்டிதான் வீட்ல இல்லையே.. பாட்டி இருந்த எடத்துல இப்போ சாமி போட்டோ மட்டும் அம்மா மாட்டி வச்சிருக்கு..  அந்த சாமி போட்டோ எதுவும் கண்டுக்காம காத்துல ஆடிட்டே இருந்திச்சு..

'என்ன சாமிடா இது'-னு திட்டிட்டு..  பாட்டிகிட்ட மறக்காம நாளைக்கு சொல்லணும்-னு நெனச்சிக்கிட்டு பாப்பாக்கு கன்னத்தில முத்தம் வச்சேன்.. சிவப்பாயிட்டா பாப்பா - வாயில இருந்த கலர் ஒட்டிகிச்சு! :)

எப்போ பாட்டிய பாக்கறதுன்னு ஒரே கவலையா இருந்துச்சு.. நாளைக்குதான் கூட்டிட்டு போவேன்-னு அம்மா சொல்லிடுச்சி..
பள்ளிக்கூடம் வேற போகணும் இன்னைக்கு.. முதல் மணி அடிச்சுட்டாங்க.. சீக்ரம் போகணும்.. இல்லைனா வாத்தியார் காப்பி வாங்கிட்டு வா-னு அலைய விட்டுடுவாரு..

ஒரே கவலையா உக்காந்திருந்தேன்.. எப்போடா பள்ளிக்கூடம் முடியும்னு காத்துட்டிருந்தேன்..

சோத்து மணி அடிக்கரப்போ அம்மா அவசரமா பள்ளிக்கூடம் வந்தாங்க..
வாத்தியார் கிட்ட ஏதோ பேசினாங்க..
பேசிட்டு நேரா எங்கிட்ட வந்தாங்க - 'பை எடுத்துக்கடா.. போகலாம்..'
'எங்கம்மா..?'
'ஆஸ்பத்திரி போகலாம்.. பாட்டிய பாக்க போகலாம்'

எனக்கு ஒரே குஷி.. இன்னைக்கே பாட்டிய பாக்கலாம்!
பாக்கெட்ல இருக்கற மிட்டாய் பொட்டலத்த தொட்டு பாத்துகிட்டேன்!
அம்மா கூட அவசரமா குதிச்சு குதிச்சு நடந்தேன்..

பஸ்ல போகும்போது அம்மா பேசவே இல்ல..

ஆஸ்பத்திரில நெறைய பேர் இருந்தாங்க.. பாட்டி தூங்கிட்டு இருந்துச்சி..
பக்கத்துல போயி கூப்டேன்...
'பாட்டி... பாட்டி..' - நாலு தடவை கூப்ட்டேன்
பாட்டி பேசவே இல்ல..
'ம்மா.. ஏம்மா பாட்டி பேசவே மாட்டேன்றாங்க?' - கேட்டேன்..
'பாட்டி பேசாது.. பாட்டிய சாமி கூப்டுகிட்டாங்க..'

எனக்கு புரியல.. ஆனா பெரிய கோபம் வந்துடுச்சி சாமி மேல..
சாமிய எனக்கு சுத்தமா பிடிக்காம போச்சு..

பாக்கெட்ல இருந்த ரோஜா மிட்டாய எடுத்து பாட்டி முன்னாடி காட்டினேன்.. எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சி..


Monday, December 12, 2011

FB Vs TNRS..!


Recently happened to enter into the facebook world! There were no expectations around and I simply started observing the busy fb fellows..
I know, I'm very late to enter into fb but I realized it heavily when I noticed the profile of a new born baby! The best part is - the kid who is less than 100 days old, have had 100+ friends already!!

Anyways, I cannot compete with that well-experienced kid but tried to see if I can survive for a while :)

Interesting posts, comments, snaps, etc, etc. Great time killer! Sometimes I used to think, why shouldn't we consider merging the matrimonial sites with facebook?! It is mutually equal beneficial to bachelors and spinsters, isn't it?

However, fb is not only for unmarried species.. it is a world where everyone from all different age groups participate and contribute.. That is the reason which allowed me to compare facebook with T-Nagar Ranganathan Street..!
--

You might have visited T-Nagar Ranganathan Street before.. If not, don't worry.. it is very easy to imagine..
It is the most lively shopping place in Chennai where wind will be struggling to enter the street but  people do without problems..
Example to say - it is the place similar to ThanksgivingDay-Walmart.. Only difference is ThanksGivingDay-Walmart is annual event but TNRS is a day-to-day event in Chennai! :)

Now it is my duty to explain, how dare I can compare fb with TNRS -

There are many points to list down but to start with -
Wherever you enter, either fb or TNRS, you would just need to step-in and the crowd will take you away and will make sure to push you to either side of the extreme ends..

Lets take couple of real example scenarios -
If you are familiar with ladies sarees section in TNRS shops, you could have noticed one thing for sure -
Every girl customer in TNRS shops will be ambitiously looking at all the sarees showcased in the shop and will start torturing the sales person to get her the perfect design she wants. By the time the poor sales-guy finished showing almost every material available in the shelves, she will look at the next girl's saree and will start thinking -
"Ada! Awesome - I really LIKE that saree"..! "and I want to SHARE the same saree!"  :)

I think, boy or girl (no bias), almost everyone is doing the same thing in fb! - 'Like -n- Share'
Anyways - it's not too good to compare the fb with saree section but have to agree the way it is! :)

There is another ideal situation for guyz too! -  It is one of the embarrassing situation where one has to sit idle for hours and hours in the busy TNRS shops and sometimes it might get extended to almost the entire day without any shopping! A common belief is that a married man is more vulnerable to these situations :)
Only good way to spend this time useful is to watch the 'colors' - I mean, dress colors. Usually any weekend day is not a boring day in TNRS. So, have to be careful in choosing these visiting days.
FB differs a little - fb is colorful all through the year! And you can go-on and browse through the profile pics until the profile owner stops you with a friendship-permit issue!
I strongly agree, this is not a purely guys' business but girls too get majorly profited with this!
Btw, it was NEVER my business so I do not have any more statistics on this! [believe me] ;)

As we well aware, the profile pics play important role.!. Theoretically, every profile pic has to represent one's original character.. but most of the times, it is actually NOT!

will drive you through some quick sample profiles -

The hi-fi professional snap - Straight eyes at the camera begging for a decent pose - Professional attire mostly with tie!
But actually the real version will be recognized, only when we get into his/her wall or "photo's of" section; there could be some snaps, taken in wild forest camps and posing for underwater snaps with only underwears! (sorry uncensored :)

Apart from the contradictory version of profile pics - There are lot of profiles hold the 'dynamic nature' of photos -
Guys in the very age of their marriage, the initial photo would hold a outdoor snap with minimum 31 teeth visible in the face..
Suddenly in one good day - the photo will be changed to a snap where he/she is graphic-ed (new word?!) to be happy with their spouse!
Hmm.. but it will not last for ever.. within short period, the profile pic will get changed to a snap where he/she stands in somewhat confused state (at least lesser teeth this time :)
After somedays - he (not she) will change the photo to completely confused state - having finger in the forehead, looking somewhere in the corner and thinking about some good past-time!
Ok.. ok. hold on - this may happen to both boys and girls. But they will finally get a good common reason to hide their confused faces - by replacing their photos with their new born baby!
A great relief - they can manage it with their kids latest snaps for next coming near-future years :)  [disclaimer: all imaginary situation mentioned here ]

Another type could be -
A cute baby's photo/A cute doll's photo - Most girls do this but not-even-a-single-boy tries this!
Never understood the real intention behind this, but it always tells us that - either they do not want to publish their snaps or they do not have one to publish!
Either case, they are visiting t-nagar in encrypted masked mode! It is good for them but not for other no-purchase-but-waiting married visitors! :)

Another type could be - Holding other celebrity's photo - Usually and mostly this category photos are the snaps of cricket players or cini-artists! Those who hold this type of photos, they are very likely to have more photos uploaded to their albums and none of them will be theirs' !
Do you agree? If you have not noticed before, you will start noticing it :)

The remaining percentage of profiles comes under the final category! - 'No profile pic'
Most of the times, these type of profiles think that this is the safest and free from no-head-breaking-confusion in photo selection. But actually yes, it is true. We do not need to worry, how the profile pic will represent our character to the public.
BUT in real time scenario - none of our frnds will encourage one to hide in the TNRS corners and do the color watching activity alone.. In fact, frnds should force them to come forward and share the joy!
fyi- it had happened for me too.. After realizing this TNRS fact, I searched through all my old albums to choose one which looked decently casual..
So - Now I'm fully legal to watch the TNRS colors!! How about you? :)

Anyways, the current generation meet their friends everyday digitally.. and they get a chance to share their special moments at the same minute.. but everything virtually
In future, proverbs could have been rewritten as - 'Facebook Is The Index Of Mind'

by-the-way, let us know: Are you legal to visit FB / T-Nagar Ranganathan street?


Enjoy the life,
Nimal

Wednesday, October 26, 2011

ரெட்டை சடை ஒற்றை ரோஜா..


ரொம்ப தெரிஞ்ச பையன் ஒருத்தன், ரொம்ப நாள் கழிச்சு சமீபமா பார்த்து பேசிட்டிருந்தேன்..
எல்லோரும் college -ல project பண்ணியிருப்போம்.. ஆனா இது interesting -ஆன school - project !! :)

கேள்வி: பச்சை-சிவப்பு combination ஒத்து போகுமா? 
இந்த கேள்விக்கு பதில்-தான் நீங்க வாசிக்க போறது! கொஞ்சம் 20 வருஷம் பின்னாடி போயிக்கோங்க.......!
====         =====        ======        ======        ======        ======

ஒண்ணு மட்டும் புரியல அன்னைக்கு..
leave -விட்டும் cricket விளையாடாம எதுக்கு நான் special class போகணும்?
அப்டியே எல்லோரையும் sir வரசொன்னாலும் ஏன் time சொல்லாம வர சொல்லணும்?
காலைல-ன்னு பொதுவா sir சொன்னாலும் நாங்க நாலு பேர் மட்டும் ஏன் சீக்கிரமா போயி சேரணும்?
இதெல்லாம் கூட OKAY.. ஆனா நாங்க எல்லோரும் வந்ததுக்கு அப்புறமா ஏன் late-ஆ அவ வரணும்?!
--

School Bus விட்டு இறங்கி ஒரு tea -ய போட்டுட்டு class போகலாம்னு 
ஓரமா உக்காந்து paper படிச்சிட்டிருந்தோம்..
அங்கதான் first scene -
அப்படியே cinema -ல வர்ற மாதிரிதான் - காத்தடிச்சு paper தானா பறந்துடுச்சி..
சரி எடுத்துட்டு வந்துடலாம்-னு போனா.. தூரத்துல பச்சை தாவணி..
அவ-தான் அவளே-தான்..!
உங்களுக்கு தெரியாது அவளை.. ஆனா எனக்கு 5 வருஷமா தெரியும்!

எப்போதையும் விட இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசம்.. ஏன்னா uniform இல்ல சனி-ஞாயிறு!
வேற color dress -ல ரொம்பவே வித்தியாசமா இருந்தா..!
பச்சையும் சிவப்பும் பத்தி கேள்வி கேட்டேனே.. உங்க கிட்ட?
அன்னைக்குதான் முதல்ல ஆராய்ச்சி ஆரம்பிச்சது!

அவளோட பச்சை dress -க்கு matching -ஆ அந்த ரெட்ட சட..
அதுக்கு matching -ஆ அழகா ஒரு சிவப்பு ரோஜா
இதுவரைக்கும் பாத்ததில்ல அந்த மாதிரி அவள

சரியா கடைய cross பண்றப்ப, என்ன ஆச்சுனு தெரியல - அவ என் பக்கமா திரும்பினா
'பகீர்'-னுச்சு உள்ளே.. 'நான் பாத்தத பாத்துட்டாளோ'-னு ஒரு பதட்டம்
கொஞ்சம் நிதானத்துக்கு வந்து மெதுவா திரும்ப பார்த்தா.., அவ என்னை பாக்கல..
பக்கத்தில இருந்த கோயில் சாமிக்கு கன்னத்தில போட திரும்பிருக்கா..!
இது தெரியாம கொஞ்சூண்டு பயத்த waste பண்ணிட்டேன்.. ம்ம்ம்

Paper படிக்கிற சாக்குல.., இந்த தெரு கடைசில இருந்து அந்த கடைசி வரைக்கும்..
பார்வையிலேயே அவள துரத்தி முடிச்சுட்டு திரும்பினா..
கைல tea glass -ஓட பசங்க அம்புட்டு பேரும் silent -ஆ அதே வேலைய பண்ணிடிருந்தானுங்க!
உள்ளுக்குள்ளேயே திட்டிகிட்டு, tea -க்கு காசு குடுத்தேன்..

அப்போதான் தோணிச்சு - இன்னைக்கு ஏதாவது அவகிட்ட பேச try பண்ணலாமா?!
இதுவரைக்கும் அந்த தைரியம் வந்ததில்ல.. ஆனா அப்போ தோணிச்சு..!
சிந்துபாத் கதைய கூட பாதியில விட்டுட்டு அவசரமா கிளம்பினேன்..
யோசிச்சுட்டே சீக்கிரமா நடந்தேன் school -அ பாத்து..

என்ன பேசலாம்? 
"bus -லயா வந்த?"-னு ஆரம்பிக்கலாமா?
"extra பேனா இருக்கா?"-னு கேட்டு பாக்கலாமா?
"monthly test -க்கு படிச்சிட்டியா?"-னு கேக்கலாமா?
இல்ல.. "dress நல்லா இருக்கு"-னு நேரா சொல்லிடலாமா?
safe idea - "class எப்போ ஆரம்பிக்கும்?"-னு கேட்டுடலாம்னு decide பண்ணினப்போ..
school  வந்துடிச்சி.. அதோ ஜன்னல்-ல அவ dress தெரியுது..!

class பக்கத்துல போனதுக்கப்புறம்தான் light -ஆ ஒரு பயம் மனசுக்குள்ள..
அது எப்டி காலுக்கும் கைக்கும் தெரிஞ்சதுனு தெரியல.. 'குப்'-னு வேர்த்துடிச்சி!
class -க்கு வெளிய நின்னு அந்த ஒரு-வரி-கேள்விய எப்டி அவகிட்ட கேக்கலாம்-னு ஒத்திகை பார்த்துட்டிருந்தேன்..
இப்படி அப்படி-னு ஒரு வழியா பதிமூனாவது தடவை - 
ஒரு மாதிரி சும்மா casual -ஆ கேட்கிற மாதிரி கேக்கலாம்-னு settle ஆச்சு..

முடிவு பண்ணிட்டு தைரியம் எல்லாத்தையும் தேத்திகிட்டு class உள்ளே போனா..
உள்ள இருந்து sir குரல் - "காலைல கிளம்பி class -க்கு வாங்கடா-ன்னா tea கடையில உக்காந்து அரட்ட அடிக்கறீங்க??"
மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு தடவை முறைச்சிட்டு உள்ள போக சொன்னாரு..
எல்லா plan -னும் சொதப்பிடிச்சேன்னு கவலையில போயி உக்காந்தேன்..

அப்புறம் என்ன? sir அவருக்கு சம்பளம் இன்னும் தரலையே-ன்ற கடுப்புல class எடுத்துட்டு இருந்தாரு!
நான் முடிஞ்ச அளவுக்கு தூக்கத்த தள்ளி போட try பண்ணிட்டிருந்தேன்..
முதல் கொட்டாவிய அளந்து அடக்கி விட்டுட்டு - திரும்பினப்பதான் கவனிச்சேன் - ஜன்னல் எனக்கு நேரா..
என்ன? "வேடிக்கை பாக்கலாம்"-னு சொல்றீங்களா?
இல்லீங்க.. அந்த ஜன்னல் பக்கத்துலதான் அவ உக்காந்திருந்தா!

Ok then , நம்ம வேலைய பாப்போம்-னு அந்த பக்கமா திரும்பினேன்..
அந்த பச்சை-சிவப்பு combination -அ இன்னும் நம்ப முடியாம
என்னோட ஆராய்ச்சிய continue பண்ணினேன்!
அடுத்து என்ன பண்ணலாம்-னு யோசிச்சுக்கிட்டே master-plan போட்டேன்..
பேனா-வ கீழ போடுற மாதிரி sound குடுத்து அவள திரும்ப வைக்கிறது-தான் திட்டம்

திட்டம்-லாம் super .. சரியாதான் பண்ணேன்.
ரெண்டு தடவை பேனா-வ கீழ போட்டும் பிரோயஜனம் இல்லாம போச்சு - பேனா nib ஒடஞ்சதுதான் மிச்சம்..!
அதுக்காக முயற்சிய விடலாமா? அடுத்த திட்டம் - "இருமல் + செருமல்"!
ஆனா அது இன்னும் மோசமா முடிஞ்சிடுச்சி - 
அவள தவிர class -ல எல்லோரும் திரும்பி பாத்தாங்க, sir -ம் சேர்ந்து :(

முயற்சி எல்லாம் தோல்வி-ல முடிஞ்சி என்னடா பண்றது-னு நகத்தை கடிச்சிட்டிருந்தப்போ.. 
சொன்னா நம்ப மாட்டீங்க - அது நடந்தது!
'என்ன? - அந்த பொண்ணு திரும்பி பார்த்தாளா'-னு கேட்கறீங்களா?
அதான் இல்லை.. கதை வேற மாதிரி போயி முடிஞ்சுது!

திடீர்னு அவ class -ல எந்திரிச்சி நின்னு sir -அ கூப்பிட்டா..
என்னடா-னு பார்த்தா - அவளுக்கு பேனா-ல ink தீர்ந்து போச்சு.. extra பேனா யார்ட்டயாவது இருக்கானு கேட்டா..!
அட.. இப்படி ஒரு சந்தர்ப்பமா-னு சந்தோஷத்துல கையை தூக்கிட்டேன்..
"வாங்கிக்கோ-மா"-னு சொல்லிட்டு, Sir board -க்கு போயிட்டாரு..

அவ என் பக்கத்துல வந்து நின்னு கையை நீட்ட - 
[ பக்கத்துல இருந்து பார்த்தத வச்சு மறுபடியும் சொல்றேன் - பச்சையும் சிவப்பும் செம்ம combination !! ]
இப்போ விட்டா அப்புறம் எப்போ பேசறது? 
நான் ஏதாவது பேசிடலாம்னு வாயை திறந்து ஒரு வார்த்தை வெளிய வர்றதுக்குள்ள.. 
என்னோட கையில இருந்து பேனாவ வாங்கிட்டு ஓடியே போயிட்டா!

ஆனா அங்கயும் ஒரு twist -
அடுத்த பத்தாவது நொடி அவ என்ன திரும்பி பார்த்தா..! 
உண்மைய சொல்லணும்னா 'முறைச்சா - கண்ணுலேயே எரிச்சா'..  :(
ஏன்-னு தெரிஞ்சதா உங்களுக்கு? - எனக்கும் late -ஆதான் புரிஞ்சது
பந்தா காட்டுனதுல பேனா nib முன்னாடியே ஒடஞ்சி போச்சே!

அன்னைக்கு அவ பண்ண ஒரே நல்ல காரியம்.. அந்த matter -அ sir -கிட்ட சொல்லாம இருந்ததுதான்!
அப்படி மட்டும் சொல்லிருந்தா, அவ்ளோதான்..
எழுதாத பேனா-வ குடுத்தது + எங்கிட்ட வேற பேனாவே இல்லாதது + இது வரைக்கும் நான் notes -ஏ எடுக்காதது - 
எல்லாமே தெரிஞ்சிருக்கும்! நல்லா வாங்கி கட்டிருப்பேன்! - 
ஆனா அன்னைக்கு அவ அப்படி பண்ணலை..!
அதானாலதான் இப்பவும் சொல்றேன்:
"ரெட்ட சட, சிவப்பு ரோஜா, பச்சை தாவணி' - ஒரு நல்ல combination !

இது வரைக்கும் நான் அவகிட்ட சொல்லலைனாலும் 
உங்க கிட்ட இப்போ சொல்றேன், கேட்டுகோங்க:

எந்த ரெண்டு colors  எதிரும் புதிருமா இருந்தாலும் -
அதை போடவேண்டியவங்க போட்டு 
அதை பாக்கவேண்டியவங்க பார்த்தா 
கண்டிப்பா இந்த கேள்வியே இல்ல!

=== ==== ===== ===== ===== ==== ==== === ==== ===== ===== ===== ==== ====

அவன் சொல்றது இருக்கட்டும்.. நீங்க என்ன சொல்றீங்க??

வாழ்க மகிழ்வுடன்!
நிமல்

Happy Diwali..!

Saturday, September 3, 2011

தங்கை - தொடரும் க(வி)தை


பார்த்து பார்த்து பாசமாய் பழகாவிட்டாலும்,
தானாக நடந்த சின்ன சின்ன நிகழ்வுகள்
இன்றும் ஜில்லென நினைவுகளை நனைக்க தவறுவதில்லை

அந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் திரும்பி பார்த்திட 
என் தங்கையுடன் ஒரு சின்ன பயணம்..

--

தவழ்கிற வயதில் பார்த்து ரசித்த அதே சிரிப்பு -
இப்பொழுதும் ஞாபகத்திற்கு வரும் தூக்கத்தில்..

'உனக்கு இந்த சட்டை நல்லா இருக்கு-ணே' - என்று
அவள் சொன்ன சட்டைவெளுத்துபோய் பல வருடங்கள் ஆயிருந்தாலும் -
இன்றும் வாரம் இருமுறையாவது போட்டு ரசிக்கிறேன்..

ஜன்னலோர பயணத்தில் அவள் கை காட்டி ரசித்த 
வெள்ளை கரும்பும், கம்பு தினையும் 
எனக்கு முதன்முதல் களவு கற்று கொடுத்தது..

அந்த இரவு மழையில் ஒடுங்கி தூங்கியிருந்த என்னை -
'அண்ணே, இடி இடிக்குது.. உள்ள வந்து தூங்கறியா? 
இந்த போர்வை-யவாவது வச்சிக்கோ'-என்ற வார்த்தைகள் 
மழையில் நனையாத என்னை அவளது மழலையில் நனைத்திருந்தது..

பேருந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி நான் சேமித்த 
பயண சீட்டு காசு அத்தனையும் கொண்டு போய் 
சினிமா கொட்டகையில் கொட்டுவதற்கு முன்பு 
அதில் இரண்டு ரூபாயை மட்டும் சிவப்பு வளையலாக மாற்றி -
அவளின் தெத்துபல் சிரிப்பாய் சேமித்து வைத்தேன்..

வெயிலில் ஊர் சுற்றி இருவரும் வாடி வதங்கி நின்றபோது
சோடா வாங்கி தர சொல்லி, அதை தான் குடிக்கும் முன் 
'நீ முதல்ல குடிச்சுட்டு குடுண்ணே..' - என்று நீட்டியபோது 
தணிந்த தாகம் போல் இன்று வரை எந்த தருணமும் அமையவில்லை..

'அண்ணே, பரீட்சைக்கு போறேன்.. வாழ்த்து சொல்லி அனுப்பு-ணே' 
என்று அன்றைக்கு தொலைபேசியில் கேட்டபோது -
நேர்முக தேர்விற்கு காத்திருந்த பதட்டம் கூட என்னுள் காணாமல் போயிருந்தது..

எல்லா தடங்களையும் இங்கே பதிவு செய்ய இதயம் முயன்றாலும்
கண்களில் வானிலை சரியில்லாமல் தடை போடுகிறது..

காலங்கள் கடந்தாலும்..
இப்பொழுதும் தொலைபேசி குரலில் பார்க்கிறேன் அந்த செல்ல சிரிப்பை..
அவளது குழந்தையின் மழலை சிரிப்பிலும் கூட..

ஒவ்வொரு பதிவும் என்றென்றும் அழியா கவிதை..
நான் முடியும் வரை தொடரக்கூடிய தொடர் கதை..!

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்
Definitely it is NOT my own experience and it cannot be too - rt?
Almost every post is the same way - Stealing others' waves and capturing it here!
Got a good chance to prove it so, for those who did not believe :)

Monday, June 6, 2011

தினம் தினம் - அதே நேரம்


தினம் தினம் ஒரு தரமாவது மொக்கை போட்டு தூங்குவது என்று 
உத்திரவாதம் கொ(எ)டுத்து கொண்ட நேரம்

இன்று மட்டும் இன்னும் அழைப்பு வரவில்லையே 
நாளை விசாரிப்போம் - என சிந்தனையில் தூங்கிய நேரம் 

சில பல நாட்கள் ஆயிற்று அடுத்த வாரம் மறக்காமல் 
கண்டிப்பாக பேசுவது - என உறுதிமொழி எடுத்த நேரம் 

 வாரங்கள் வந்து வந்து போனாலும், பேசி மொக்கை போட 
வரும் ஞாயிறு அன்று நிமிடம் ஒதுக்கிட திட்டம் தீட்டிய நேரம்

கடைசியாக நடந்த பழைய உரையாடலின் முற்று புள்ளியை ஆராய்ந்து
கொஞ்சம் அதை முறைத்து விட்டு தூங்கிய நேரம்

இப்பொழுதெல்லாம் அந்த நிமிடங்கள் காணாமல் போனதாக
உச்சந்தலை மின்விசிறியிடம் முறையிட்ட நேரம்

அலுவலக வேலைகள் அதிகமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது 
உரிய காரணங்கள் இருக்கலாம் - என தீர்ப்பு எழுதிகொண்ட நேரம் 

ஆயிரம்தான் இருந்தாலும் என்றும்-எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசும் மனம், 
கொஞ்சம் ஆழ்ந்து ஆராய்ந்து அலசி பார்க்க சொல்லும் நேரம்

"அதே நேரம்" - மீண்டும் மீண்டும் - தினம் தினம் -
ஆனால் சிந்தனைகள் மட்டும் கண்டிப்பாய் மாறும் - மாறும்

வயதுகள் போட்டி போட்டு முந்திக்கொண்டு ஓடினாலும் 
வார்த்தைகள் மனதிற்குள்ளேயே முடங்கிப்போய் 
பாரம் ஆக்கி விட்டது நம்மை..

நம்மை நாமே லேசாக்கி கொள்ள - 
முடங்கிய வார்த்தைகளைக் கொஞ்சம் சிதற விட -
எடுத்த முயற்சியாக இருக்கட்டும் இந்த - "தினம் தினம் - அதே நேரம்".

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்.

Tuesday, January 11, 2011

காத்திருப்பு..

பச்சை மரத்தின் கீழ் நின்று உயரே நிமிர்ந்து பார்த்து, இனியும் இவ்வளவு சுகம் உண்டோ என நினைத்தபோது, மணி சரியாக காலை பத்து என்றது. எட்டு மணி முதல் என்னுடன் கம்பெனி கொடுத்த காக்கைக்கு கூட கொஞ்சம் சலிப்பு தட்டியிருந்தது. காக்கைக்கு தெரியுமா காத்திருப்பினில் உள்ள சுகம்?

--

மணி பத்தரை தொட்டபோது, காற்று அங்கே கொஞ்சம் என்னை தொட்டு திருப்பியது. அட, என்ன அதிசயம் - காற்றுக்குகூட என்னுடைய தூக்கத்தின் தூரம் தெரிந்திருந்தது. அதோ என்னுடைய காத்திருப்பின் முற்றுபுள்ளி கூப்பிடு தூரத்தில்.
சட்டென்று கவனித்தேன், தூரத்தில் நெருங்கும் அவள் முகத்தில் ஒரு பதட்டம். சற்றும் ஒத்துபோகாத அந்த முகமூடி இதுவரை அவளிடம் பார்த்ததில்லை. இரண்டரை மணி நேர காத்திருப்பு களைப்பு காணாமல் போய், எனக்குள் கவலை வந்து ஒட்டி கொண்டது. அதை கொஞ்சம் கூட்டி கும்மாளம் போடுவதில் இந்த மரத்திற்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை - அங்கு வெளியே திமிறி படர்ந்திருந்த வேர் அவள் காலை பதம் பார்த்து விரலுக்கு சாயம் போட்டு முடித்தது. அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாத
அவளின் கண்கள் என்னுள் ஏதோ விபரீதத்தை எதிரொலித்தது - ஒரு வேளை கவனம் முழுதும் குவித்து கவலை பட இதை விட ஏதோ ஒன்று பெரிதாக உள்ளதோ?!
'அப்படி ஒன்றும் இருக்காது' என்று எனக்குள் மனதை தேற்றி கொண்டேன்..

அந்த கடைசி சந்திப்பின் முதல் வார்த்தை இப்படிதான் ஆரம்பித்தது -
'ஏய், பாத்து..'
'ம்.. பரவாயில்ல..'
'வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலாமா?'
'இல்ல, வேண்டாம்.. மனசில வலி இருக்கும்போது காயம் வலிக்காது'

யாரோ என்னை தூக்கி பள்ளத்தில் போட்டதாக ஒரு சறுக்கல் என் மனதிற்குள்..

'என்ன ஆச்சு? எதுவும் பிரச்சினையா? நான் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேன்.. ஆனா நீ ஏன் இப்படி பேசற?'
'ம்.. நானும் நேத்து நடந்த ஒரு முக்கியமான விஷயம் பத்தி கடைசியா சொல்லிட்டு போயிடலாம்னுதான் வந்தேன்'
'ஏன் இப்படி பேசற? என்ன ஆச்சு நேத்து? வீட்ல யாருக்கும் எதுவும்......?'
'இல்ல.. அது.. நான் கண்டிப்பா சொல்றேன்.  இப்போ வேணாம். நான் உணர்ச்சிவச பட்டுடுவேன். நீ கூப்பிட்ட காரணம் சொல்லு'
'ம். நான் ஒரு சந்தோசமான விஷயம் பேசலாம்னு வந்தேன். ஆனா நீ இருக்கற நிலமையில எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. இன்னொரு நாள் சொல்றேன்'
'என்னை விடு.. இது நிரந்தரம். ம்ம்ம்.... சரி. எதை பத்தின்னு மட்டும் தெரிஞ்சுகலாமா?'
'ம்.. நேத்து நீ கேட்டதுக்கான பதில்தான்..! நான் யோசிச்சு பார்த்தேன், எனக்கும் சரிதான்னு தோணிச்சு.. அதான் உங்கிட்ட அதை பத்தி.......'

பேசி கொண்டிருக்கும்போதே என் உதடுகளை அடைத்த அவளது விரல்கள், எனது குரலை தொண்டைக்கு அடியில் ஆழமாக குழி தோண்டி புதைத்தது. எனது சுற்றும் உலகம் சற்று வெற்றிடமாய் மாறி எனது இதய துடிப்பை ஒவ்வொரு தசை செல்லிற்கும் ஏற்றி என்னை திணற செய்தது..

'இல்ல.. தயவு செஞ்சி அதை பத்தி இனிமே பேச வேண்டாம்' - அவளின் குரல் கண்ணீரில் கரைந்து சன்னமாய் ஒலித்தது - என்னை சல்லி சல்லியை உடைத்தது.
உடைந்த என்னை விட்டு விட்டு, அவளின் அடுத்த வார்த்தைக்காக சிலையாய் தவம் நின்றேன்.

'நேத்து இருந்த நான் இப்போ நானா இல்ல.. நிறைய மாறிடுச்சி. ஒரே நாள்ல எல்லாமே மாறிடுச்சி..'

கட கட-வென சொல்ல ஆரம்பித்தாள் அவளின் கண்ணீரின் வேகத்தில்..

'நேத்து சாயங்காலம் நடந்த ஒரு விபத்து என்னோட வாழ்க்கைய அப்படியே மாத்தி போட்டுடுச்சி.. என்னோட அக்காவும் அத்தானும்..'

அவளால் தொடர முடியவில்லை.. இருந்தும் கண்களை மறைத்து விட்டு தொடர்ந்தாள்..

'...இப்போ நான் என்னை பத்தி யோசிக்கற நிலமையில இல்லவே இல்ல. எனக்கு இப்போ இருக்கற ஒரே கடமை என்னோட அக்கா குழந்தைங்கள பாத்துக்கறது மட்டும்தான்.. அதனால என்னை தயவு செஞ்சி வேற எதுவும் கேக்காத..'

சொல்லி விட்டு வந்த அதே பாதையில் வேகமாக விரைந்தாள்..  இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. ஒரு வேளை இது கனவாக இருந்தால் இனி அந்த இரவு தூக்கத்தை அப்போதே தூக்கில் போட்டிருப்பேன்.. சில சமயங்களில் நனவு, கனவை விட கொடுமையானது.

சோகம், கவலை, விரக்தி - இவைகளில் எதுவுமே இல்லாமல் ஒரு வெற்றிட காத்தாடி போல் மெதுவாக எங்கேயோ நடந்தேன்..


நானும் யாருமே அறிந்திராத கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை அறியாமலே இருக்க ஆசைப்படுகிறேன் -
அந்த நாளின் முந்தைய கடைசி மாலைபொழுது - அவள் என்னிடம் காதல் சொன்ன தருணம் - நான் அவளை சந்தித்த அந்த மின்னும் நிமிடங்கள்- அவள் என்னிடம் நெருங்கி வந்து சொன்ன அந்த அழகிய சொற்கள், அந்த சொற்களில் பட்டும் படாமல் தெறித்த அந்த காதல் - எந்த ஆண்மகனுக்கும் வெட்கம் கற்றுத்தரும் அந்த தருணம், ஆகாயத்தில் குருவிகளை விஞ்ச துடிக்கும் இறக்கை கட்டிய மனது - அத்தனையும் ஆசுவாச படுத்த நான் எடுத்த ஒரு ஆயுதம்தான் தண்ணீர். பச்சை தண்ணீர் போலவேதான் என்றாலும் என்னை இன்னொரு உலகத்திற்கு இலவச இணைப்பாகவே அனுப்பி வைக்கும் மருந்து.. அன்று குடித்து விட்டு மொட்டை மாடியில் இருந்து தூக்கி போட்ட அந்த பாட்டில் என் காதலை ஒட்டு மொத்தமாக நொறுக்கி செல்லும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆம், அதுதான் அவளது அக்காவை விபத்திற்கு உள்ளாக்கியிருந்தது. எனது காதலுக்கும் அதுதான் முடிவு கட்டியிருந்தது..
இதை இன்று வரை உணராமல் உயிர் வாழ்கிறேன்.. எதையோ விற்று எதையோ வாங்கிய கதை..


ஒரு வருடம் ஓடிபோயிருந்தது.. இருந்தும் எனது காயங்கள் மட்டும் இன்னும் ரணமாய் -

இன்று -
நண்பர்கள் என்னை கட்டிபிடித்து காதருகில் புது வருட வாழ்த்து சொன்னபோதுதான் நினைவிற்கு வந்தது இன்றோடு நானும் என் பாட்டிலும் நொறுங்கி ஒரு வருடம் ஆகிவிட்டதென்று..

இன்று மட்டும் நான் அந்த கடைசி சந்திப்பு நடந்த பூங்கா பக்கம் போகவே கூடாதென புது வருட ஆரூடம் எடுத்தேன். இதற்காக நண்பர்களுடன் வெளியூர் பயணம் போகவும் ஒப்பந்தம் போட்டேன்..

என்னுடைய பாவம் எனக்கு தெரியாமலே என்னை தொடர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.. நான் பின்னால் உக்கார்ந்து சென்ற பைக்கிற்கு நேரம் சரி இல்லை.. படுத்து விட்டது நடு வழியில்.. பற்றாகுறைக்கு மழை வேறு புதுவருட கொண்டாட்டதிற்கு சரியாக பூமிக்கு வந்து சேர்ந்தது.. எனது அதிர்ஷ்டம் அல்லது துரதிஷ்டம் - நாங்கள் ஒதுங்கிய இடம் அதே பூங்கா.. அதே பச்சை மரம்..!

ஏதோ.. உலகத்தில் இருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு, கண்களுக்குள் தடுப்பு அணை போட்டு காத்திருந்தேன் மழை நிற்பதற்காக...

அப்போது -
திடும்-என சத்தம் கேட்டு திரும்பினேன்.. பாவம் ஒரு பெண் கையில் குழந்தையுடன் அதே மரத்தில் அடி பட்டிருந்தாள். கொஞ்சம் மரத்தின் மேல் கோபம் வரத்தான் செய்தது..
என்னுடைய அவளும் இந்த நிலையில்தானே இப்போது இருப்பாள் என மனதில் நினைத்து கொண்டேன்..
அந்த கணம், என்னையும் அறியாமல் அந்த பக்கம் திரும்பி நின்றிருந்த பெண்ணிடம் சொன்னேன் - 'பாத்துங்க'
'ம்.. பரவாயில்ல..' - எப்போதும் பரிட்சயமான அந்த குரல் என்னை தூக்கி வாரி போட்டது..
அவள் தான்.. அவளேதான்..
அவளும் தாடிக்குள் ஒளிந்திருந்த என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்..
நான் அவள் கண்களை பார்த்தேன்.. சற்று குனிந்து அவள் கையில் இருந்த குழந்தையையும் பார்த்தேன்.. வார்த்தைகள் உள்ளேயே ஒளிந்து கொண்டு வெளியே வர மறுத்தன..

அவள்தான் ஆரம்பித்தாள்-
'ஏய்.. நீயா இங்கயா?? எப்படி இருக்க? எவ்ளோ நாள் ஆச்சு உன்ன பார்த்து.. நான் இங்க உன்ன பாப்பேன்னு நெனச்சி கூட பாக்க்கல.. எங்க போயிட்ட நீ?? எத்தன நாள் உன்ன இங்க தேடிருப்பேன் தெரியுமா? இன்னும் கூட என்னால நம்பவே முடியல, நான் உன்ன ..................................'

அவள் பேசி கொண்டுதான் இருந்தாள்.. இருந்தும் என் மூளை அவளது கேள்விக்கு பதில்களை தேடவில்லை.. மாறாக என் உள்ளத்திற்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி கொண்டிருந்தது..
நான் மெல்ல கையை அசைத்து அந்த குழந்தையை தொட்டு பார்த்தேன்..

அவள் தொடர்ந்தாள் - 'என்ன இப்படி பாக்கற? அக்கா பையன்.. நல்லா வளர்ந்துட்டான்ல? அக்காவும் அத்தானும் கூட இப்போ நல்லா தேறிட்டாங்க.. வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாரேன்..'

இப்போது அந்த வெற்றிடம் முழுதும் ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்..

மீண்டும் அவளே தொடர்ந்தாள் -  'அப்புறம், இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலைல?'
நான் தலையை மட்டும் அசைத்தேன்..

'அப்போ, எப்போ வீட்ல வந்து பேசற?'

பட்டாம்பூச்சி கூட்டம் அத்தனையும் இப்போது உள்ளேயிருந்து தூக்கி பட்டம் போல் என்னை உயரே பறக்க விட்டிருந்தன..!

சுதாரித்து கொண்டு வெளியே சிதறிய என் வார்த்தைகள் -
'கால்ல அடிபட்டது வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலாமா?'
'இல்ல, வேண்டாம்.. மனசில சந்தோஷம் இருக்கும்போது காயம் வலிக்காது'


வாழ்க மகிழ்வுடன்,
நிமல்.

Saturday, June 5, 2010

Bachelors - be careful..!

This dialogue sequence is real one and observed in the canteen at dinner time

A boy and a girl (by guess, young married couple) were sitting next to my table in the canteen..
They had brought their own food in their carry-boxes.. they were opening the boxes and started their conversation:

--

Girl: En phone pannave illa?
Boy: (no answer.. busy in opening the box)
Girl: Kekarenla.. en phone pannave illa?
Boy: (
no answer.. busy in opening the box)
Girl: unkita-dhaan pesitiruken.. phone en panala?
Boy: naan ena sonaalum nee sonadhudhaan correct-nu solla pora
Girl: haan.. naan solradhu correct-dhaan..
(silent both the sides)
Girl: naandhaan padichu padichu afternoon solirundhenla.. apram en phone panala?
Boy: (no answer - eating)
Girl: rest room vandha vudane phone-a eduthu paathiruppalla.. thirumba panradhukenna?
Boy:
(no answer - eating)
Girl: naan call pannunaadhaan nee call pannuviyaa? neeya oru dhadava kooda call pana maatta?
Boy:
(no answer - eating)
Girl: ketutu irukenla? sollu.. en call panala?
Boy:
(no answer - eating)
Girl: unkita dhaan pesitiruken..
Boy: (murmuring something)
Girl: appo naan enna loosaa?
(silent - tears!!)


Girl: enna pannittu irundha?
Boy:
(said something in low tone)
Girl: Ohh... naan call pannuven-nu mobile-a paatthute ukkaandhirundhiyaa?
Boy:
(no answer - eating)
Girl: idhu unakke konjam over-aa therla? nee phone panniruka vendiyadhudhaane naan panalainaa?
Boy:
(said something in low tone)
Girl: haan.. adhelaam solaadhaa.. adhu elorumdhaan panuvaanga.. ippo ennanu sollu
Boy: (no answer - eating)
Girl: modhalla call pannunaa thirumba panna maattiyaa?
Boy: (no answer - eating)
Girl: yeii.. kekudhaa naan solradhu?
Boy: (said something in low tone)
Girl: ennadhu? apdidhaan pesuven.. nee kettudhaan aaganum.. 
Boy:  (stopped eating - staring at somewhere)
Girl: anga enna paarvai unakku ippo? kekaradhuku bathil solu first
Boy: (no answer - eating)
Girl: oru thadavai call pannirukalaamla?

Me: adadaaa.. marupadiyum modhalla irundhu start panraangadaaa... aala vudunga saami..
(by this time, ennoda dinner plate gaali aagiduchi.. adhoda evloo neramdhaan tamil theriyaadha maadhiriye nadikaradhu..!? :) )


So guys, BE CAREFUL..! but still nobody can save us.. so BE READY!

Enjoy the "bachelor" life,
Nimal

Sunday, March 14, 2010

Living the Life

  
"If you never failed, you never lived!" - quote

--

We failed when we were 1feet and were trying to put ourself uncomfortable to move a little distance
We failed when we were 2feet and were trying to go for a walk though We never had a prior experience of it
We failed when we were 3feet and were trying to handle the much complicated two wheels vehicle, all with our little hands & legs
We failed when we were 4feet and were trying to find time to extract everything out of the whole set of books

Are those failures spoiled our life?? No, isn't it? Actually all these failures allowed us to realize that we live our life to the fullest..
Now the actual question is - Are we willing to fail now?

To say frankly, once we have grown enough, we start afraid of the failure.. Nobody wants to fail in any moment of their life, that means - Nobody wants to live their life.
We may have stopped growing in height but we have more and more to try in our life.

"TRY" - its a simple word to spell but tough one to put that in execution!
Try may not always end up in success; most likely it may end up in failure but it atleast gives a chance to realize that we are living..

Instead of repeating the regular routine work again and again, Are we really trying to do something different in our day to day life??

Sometimes we may get a cross question in our mind - what is the need of "different" when already things are going well?
Its a valid question and the answer is as simple as that why do we try different menu for everyday lunch when the curdrice is a very good choice.

Ok, well. when talking about "doing different", the direction of thoughts may divert in various directions depends on the mood of the person..
Just to limit that to a single channel, consider that we are talking about "doing different" in simple activities.
Because, when we think about something different, we may end up with thinking about the AIM of our life.
That is good but finding the AIM requires lot of self realizing and not an over night decision.

Back to the main focus, when start thinking about the "doing different", Its always good to start fresh, like a child.

"Distance is nothing; it's only the first step that is difficult." - quote

We never imagined that we can walk around the whole world when we tried for our first step.
We never worried about how many times we fell down before a successful short walk

Those beginning days are happy days and everyone likes to live the days again!
Its not possible to go back to those days until unless if we are able to rotate the earth the other way around..!
but it is possible to live that 'kind of' life again by a fresh start, like those beginning days!

When thinking about the "try", usually the plan starts either by targeting something big or by setting up a comfortable path before walking thru it.
Neither of these approaches work out most of the times..

"Try" is always associated with a risk and so if we want to "try" something then there shouldn't be any trace of worry about the risk associated with it.
ONLY IF we take the leg off from the ground, we will able to make the first successful step..! That first step will give the confidence which will be good enough to win the world..!

We are not here to accept our life as it comes; we are here to re-define it in an unique way!
So, TRY something "DIFFERENT" that nobody has ever done! Never worry about failure instead live all those moments!

After-all, Life is not just a word to spell.. but to live it!

Enjoy the "different" life,
Nimal

[ps: some content/context - Inspired by the line from old movie song - "Undu undu endru nambi kaalai edu.."]

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer